உடல் நலம் : கொத்தமல்லி இலை மற்றும் விதையின் மருத்துவ பயன்கள்

Wednesday, July 10, 2019

கொத்தமல்லி இலை மற்றும் விதையின் மருத்துவ பயன்கள்





கொத்தமல்லி  இலையாகவும்,  விதையாகவும்  சமையலுக்கு பயன்படுத்துகிறோம். இது  சமையலை  நல்ல மணம்  மற்றும்  சுவையை தருகிறது.

 கொத்தமல்லி  இலையில்  பாஸ்பரஸ்,  பொட்டாசியம்,  கரோட்டீன், புரதம், தயமின்,  நியாசின், வைட்டமின்  K, B, மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட்  போன்றவை  நிறைந்துள்ளது.  

கொத்தமல்லியில்  அதிக  அளவு  ஆன்டிஆக்ஸிடென்ட்  அதிகம்  உள்ளதால்,  நோய் கிருமிகளை  எதிர்க்கும்  தன்மை  கொண்டது.  கொத்தமல்லி  பூஞ்சை தொற்று  எதிர்க்கும்  தன்மை  கொண்டது. பூஞ்சைகளால்  ஏற்படும் தேமல், படை, சோரியாசிஸ்  போன்றவற்றிற்கு  மருந்தாகிறது.  கொத்தமல்லி இலையை  அரைத்து  அதனுடன்  எலுமிச்சை  சாறு  சேர்த்து  தடவி  வந்தால்  ஒரு வாரத்தில்  சரியாகி  விடும்.

கொத்தமல்லி  இலை அரைத்து  வடிகட்டி  அதனுடன் தேன், மற்றும் எலுமிச்சை சாறு  சேர்த்து  வெறும்  வயிற்றில்  குடித்து  வந்தால்  உடல் எடை குறையும்.  

கொத்தமல்லி  இலை    வாத நோய்க்கு (ARTHRITIS)  மருந்தாகிறது. கொத்தமல்லி  இலை  ஒருசிறு துண்டு  இஞ்சி,  ஒருஸ்பூன்  சீரகம்,  அரைத்து  வடிகட்டி  தண்ணீர் மற்றும்  எலுமிச்சை சாறு  சேர்த்து  குடித்து  வந்தால்  வாதத்தினால் ஏற்படும்  வலி  குறைந்து  விடும். உடலின்   உள்ள  கெட்ட  கொழுப்புகள்  கரைந்து  நல்ல  கொழுப்புகளை அதிகரிக்க  செய்கிறது.


கொத்தமல்லி  விதையை  ஒரு ஸ்பூன்  இரவு  ஊறவைத்து  அரைத்து  அதனுடன்  எலுமிச்சை சாறு  சேர்த்து குடித்து  வந்தால் இரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள்  வந்துவிடும்.

கொத்தமல்லி  விதையை  இரவு  ஊறவைத்து,  மறுநாள்  காலையில் அதனுடன்  ஒரு துண்டு  இஞ்சி,  ஒரு  ஸ்பூன்  சீரகம்,  சேர்த்து   அரைத்து  வடிகட்டி   அதனுடன்   அரை மூடி எலுமிச்சை சாறு  சேர்த்து  மூன்று  நாள்  குடித்தால்  தலைசுற்றல்,  பித்தத்தினால்  ஏற்படும்  மயக்கம்  போன்றவை சரியாகிவிடும்.  

கொத்தமல்லியில்  வைட்டமின்  K  அதிகம்  உள்ளதால்  நினைவு திறனை அதிகரிக்கிறது. அல்சய்மர்  நோயை  குணப்படுத்துகிறது.  கொத்தமல்லியில் உள்ள  வைட்டமின் A,  மற்றும்  ஆன்டிஆக்ஸிடென்ட் புற்றுநோய்  செல்கள் பரவுவதை  தடுக்கிறது.

சுவாச குழாய் அடைப்புகளை  நீக்கி   நுரையீரலை சுத்தப்படுத்துகிறது. கொத்தமல்லி  இலையில்  வைட்டமின்  பி  அதிகமாக  உள்ளதால் வயிற்றுப்புண் மற்றும்  வாய்ப்புண்  குணப்படுத்துகிறது.

நரம்பு மண்டலத்தை  சீராக்குகிறது.  இரத்த சிவப்பு  அணுக்களின் எண்ணிக்கையை  உயர்த்துகிறது.  சிறுநீரக  தொற்று  குறைகிறது. கொத்தமல்லி வயிறு  பசியின்மை,  வயிறு மந்தம், வயிறு உப்புசம், வயிற்றுப்போக்கு, குடல் இறக்கம், போன்றவற்றை  சரியாக்குகிறது.

பாலூட்டும்  பெண்களுக்கு  கொத்தமல்லி  இலையை  உணவுடன்  சேர்த்து சாப்பிடுவதால்  பால் உற்பத்தியை  அதிகரிக்கிறது. உணவினால்  ஏற்படும் ஒவ்வாமை  குறைக்கிறது.

கொத்தமல்லி  இலையுடன், சோம்புஆரஞ்சு தோல் , லவங்க பட்டை  சிறிது  மற்றும்  இஞ்சி  சேர்த்து  கொதிக்க  வைத்து  அந்த  நீரை குடித்தால் மலச்சிக்கல்  சரியாகி விடும்.

No comments:

Post a Comment