உடல் நலம் : அன்பு குழந்தையே...

Monday, November 11, 2019

அன்பு குழந்தையே...




" பாபா, உன்னை வணங்காத நாளில்லை. ஆனால் இன்னும் என் பிரச்சினைகள் தீர்ந்த பாடில்லை. மாறாக, நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது.

"என்ன செய்வது என்று கூட தெரியவில்லை.
சில நேரங்களில் நான் தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற முடிவுக்குக் கூட வந்து  விடுகிறேன்."

"இன்றோ, நாளையோ நீங்கள் எப்படியாவது காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில் என் முடிவை தினமும் தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கிறேன். ஆனால் முடிவு  வரவில்லை..”

இப்படி புலம்புகிறவர்தானே நீங்கள்? முதலில் ஒன்றை புரிந்து கொள் என் குழந்தையே,

உனக்கு எந்தளவுக்கு உன் மீது நம்பிக்கை இருக்கிறதோ அந்த அளவுக்கு தான் உனக்குக் கிடைக்கிற பலனும் இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்.

செய்த புண்ணிய பாவத்திற்கு ஏற்ப கர்மாவை அனுபவிக்கிறாய். நீ இப்போது அனுபவிக்கும் கஷ்டத்தை தாங்காமல் தவிக்கிறாய்,

ஆனால் உன் துயரத்தில் பெரும் பகுதியை நான் என் குழந்தைக்காக அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன். மனதை அமைதியாக வைத்துக்கொள்.

எந்த விதமான குழப்பங்களை அதற்குள் அனு மதிக்காதே. இந்த நிலை வெகு விரைவில் மாறி உனக்கு வெற்றி கிட்டும். நான் கூறியது எதுவும் உன் வாழ்வில் நடக்கா மல் இருக்காது.

உன் உழைப்பு, அன்பு, மதிப்பு தெரியாத மனித மிருகங்கள் மத்தியில் அகப்பட்டு தவிக்கிறாய். கவலை வேண்டாம் அங்கும் நான் உன்னோடு தான் இருக்கிறேன்.

நீ உன்னுடைய கடமையைச் செய், உன் உள்ள த்தில் எப்போது குழப்பம் வந்தாலும், நான் உன் உள்ளிருக்கிறேன் என்பதை நினை. உன் குழப்பமெல்லாம் தீரும் காலம் வந்துவிட்டது.

இனி வரப்போகும் காலம் உனக்கு ஜெயத்தை மட்டுமே கொடுக்கப்போகிறது. சந்தோசமாக இருப்பாய். இனி காலமெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கும். உன் குழப்பங்கள் எல்லாம் தீரும்

உன் அம்மாவாக அப்பாவாக என்றும் துணை இருப்பேன். நீ என் பரிபூரண அருளும் ஆசிர் வாதமும் அன்பும் பெற்ற என் செல்ல பிள்ளை.

ஓம் ஸ்ரீ சாய் ராம்....


No comments:

Post a Comment