உடல் நலம் : ஸ்ரீகிருஷ்ணரின் தலையில் நீங்கா இடம் பிடித்த மயிலிறகு...!!

Saturday, November 23, 2019

ஸ்ரீகிருஷ்ணரின் தலையில் நீங்கா இடம் பிடித்த மயிலிறகு...!!



சத்தியத்தை காப்பதற்காகவும், அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நிறுத்துவதற்காகவும் மகாவிஷ்ணு எடுத்த  ஒன்பதாவது அவதாரமே கிருஷ்ணாவதாரம். அன்றை தினமே கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.


ஸ்ரீகிருஷ்ணரின் அடையாளமாக இருப்பது தலையில் உள்ள மயில் இறகு மற்றும் புல்லாங்குழல். கண்ணனின் @இசைக்கு மயங்காத மனிதரே கிடையாது.

எப்போதும் குழலுடன் இருப்பதால் குழலூதும் கண்ணன் என்றே அழைக்கலாம். ஒரு புறம் குழல் என்றால் இன்னொரு புறம் மயில் இறகு.

கண்ணனின் அழகுக்கு அழகு சேர்ப்பது போல் இருப்பது இந்த மயில் இறகுதான்.

புராணக் கதை :

கம்சனின் கொடுமை காரணமாக கிருஷ்ணருடைய பெற்றோர் சிறையில் வாடினர். #தங்கத்தொட்டிலில் இட்டு சீராட்டப்பட வேண்டிய குழந்தை மூங்கில் கூடையில் கடத்தப்பட்டு கோகுலத்திற்கு எடுத்து செல்லப்படுகிறான்.

இதனால் ஆயர்பாடி புழுதியில் விளையாட வேண்டியவன் ஆகிறான். ஆனால் ராஜலட்சணம் பொருந்திய அவனது முகம் பார்ப்போரை எல்லாம் வசீகரித்தது.

அவன் புதுப்புது யுக்திகளைக் கையாண்டு சின்னச்சின்ன பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டான். இதை கண்ட ஆயர்பாடி சிறுவர்கள் கண்ணனை கௌரவிக்க விரும்பினார்கள். உடனே அங்கே சுற்றித்திரிந்த மயிலை பிடித்தார்கள்.

அதனிடம் இருந்து ஓர் இறகை எடுத்து கிருஷ்ணரின் தலையில் கிரீடம் போல் செருகினார்கள். அன்று முதல் கிருஷ்ணரின் தலைமுடியில் மயிலிறகு நீங்காத இடம் பிடித்தது.

கிருஷ்ண ஜெயந்தி பூஜையால் உண்டாகும்  பலன்கள் :

கிருஷ்ண ஜெயந்தி பூஜையில் சிறுவர்கள் கிருஷ்ணரின் கதைகளை சொல்லி வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மாணவ-மாணவிகளுக்கு புத்தசாலித்தனம் கூடும். #புரிந்து கொள்ளும் ஆற்றல் திறமை அதிகரிக்கும்.


No comments:

Post a Comment