உடல் நலம் : அன்றாட வீட்டு வேலைகளில் உதவிடும் குழந்தைகள் தாம் வாழ்வில் மிகச்சிறந்த வெற்றியடைய முடியும் !!!!

Wednesday, November 27, 2019

அன்றாட வீட்டு வேலைகளில் உதவிடும் குழந்தைகள் தாம் வாழ்வில் மிகச்சிறந்த வெற்றியடைய முடியும் !!!!

நிதர்சனமான உண்மை !!!



Dr.Safi, Pediatrician ,
Nagercoil .

சமீப காலங்களில் என்னுடைய மருத்துவமனைக்கு வரும் பெரும்பாலான குழந்தைகளின் பெற்றோர் தரும் செய்தி ,

அதில் இன்று வந்த ஒரு பெண்மணி ,

சார் என் குழந்தைக்கு ஷு லேஸ் கூட கட்ட தெரியாது சார் !!

தலை சீவ மாட்டான் ,

நான் தான் இன்றும் உணவு கூட ஊட்டி விடுகிறேன் ..

வயசென்னமா ஆச்சு ??

10 வயசு சார்

சரி !!! 😲

என்ன படிக்கறார் மா ?

6 ம் வகுப்பு சார் .

சூப்பர்

எப்படி படிப்பார் ?

நல்லா படிக்கறான சார் ,

ஆனா

க்ரேட் தான் நெனச்ச மாதிரி வரல

கணக்குல ரொம்ப வீக் ,
ஸ்போர்ட்ஸ் இண்ட்ரெஸ்ட் இல்ல ,
செஸ் வரமாட்டேங்குது
கராத்தே போக மாட்டேங்கறான் ,
ஸ்விம்மிங் க்ளாஸ் போறான் ஆனா சளி பிடிக்குது வேண்டாம்னு வெச்சுட்டோம்.!!
வெஸ்டெர்ன் மியூசிக் படிக்கறான் ,

ஒகெ
ஒகெ..!

வீட்டு வேலைகளில் அக்கரை இருக்காமா ??

வீட்டு வேலனா என்ன சார் ?

அவன் உங்களுக்கும் உங்கள் அன்றாட தேவைக்கும் செய்யும் உதவிகள் மா ..!

அட நீங்க வேற சார் ,

தண்ணீர் குடிக்க கூட எந்திரிக்க மாட்டான் !! 😢

இது நல்லதாம்மா?

நல்ல படிச்சா போதும் சார் !!/

அப்படியானால் எதுக்கு கராத்தே ,நீச்சல் எல்லாம் அனுப்பறீங்க ..!?

எல்லாம் தெரிஞ்சிருக்கனும் இல்ல சார் ,
நாளைக்கு அவன் தனி ஆளா இந்த உலகத்தை சமாளிக்கனுமே !!

ஓஹோ...!

ரைட்டு.
வீட்டில் உள்ள விஷயங்களை சமாளிக்க தெரியாமல் எப்படிமா ஊரிலும் ,நாட்டிலும் , வெளி நாட்டிலும் உள்ள விடயத்தினை சமாளித்திட முடியும் !!

அதில்ல சார் ,
ஒரே பையன் ??

இது இன்னும் மோசம் ,

அப்ப , நீங்க மேலும் எச்சரிக்கையாக இருக்கணுமே மா !!

அவரிடம் விபரங்களை கூறி , அந்த சிறுவனிடமும் அவனது பழக்க வழக்கங்களில் இருந்த சாதக பாதகங்களை எடுத்து கூறி ,
அன்றாடம் அவன் செய்ய வேண்டிய விடயங்களை ஓர் அட்டவணை போட்டு கொடுத்து அனுப்பிவிட்டேன் !!

தற்போது கதை சுருக்கம் ..!

#ஹார்வார்ட்_பல்கலைக்கழகம் நடத்தும் மானுடர்களுக்கான மிகப்பெரிய ஆய்வுகளில் ஒன்றான
#Harvard_Grant_study எனும் ஆய்வில் ,

குழந்தைகளை அன்றாட வீட்டு பணிகளில் இருந்து விலக்கி வைப்பது பெரும் அபத்தம் எனவும் ,
இதனால் அவர்களது பலவகையான ஆற்றல்களின் ஆக்கங்கள் குறைபடும்.எனவும் அறிவுறுத்துறது ,

மேலும் ,

படிப்பு ,
கற்றல் ,
போட்டி தேர்வு ,
தரவரிசை ,
மதிப்பெண் ,
மதிப்பீடு ,
பல்வேறு கலை கற்றல்

இவை அனைத்திற்கும் தேவைப்படும்
ஆக்கமும்,
ஊக்கமும்,
மன தைரியமும்,
நம்பிக்கை தூண்டலும் ,
வெற்றி ,தோல்விகளை பகுத்தறியும் பக்குவமும் ,
உடனிருப்போருடன் உறவாடும் உளவியலும் ,

நிச்சயமாக வீட்டில் நடத்திடும் நடத்தைகளே தீர்மானிக்கும் என்கிறது இந்த ஆய்வு .!

மாறாக ,

சிறு வேலகளை கூட செய்திட முடியாமல் இருக்க செய்ய செய்திட அனுமதிக்காத பெற்றோர்களை இந்த ஆய்வு எச்சரிக்கிறது ,

சார் ..
என்ன சார் இது குழந்தையை எல்லாம் வேலை வாங்க சொல்றீங்க ,
குழந்தை தொழிலாளர் ஒழிக்க பாடுபடும் தேசம் சார் இது ??

உண்மை .!/

நான் அவர்களை வேலை வாங்க சொல்லவில்லை ,

உங்கள் அன்றாட வேலைகளில் அவர்களை சேர்த்துக்கொள்ள தான் சொல்கிறேன்

தினமும் பள்ளி செல்லும் குழந்தைகளானால்

அவர்களது தண்ணீர் பாட்டிலை அவர்களே நிறைக்க செய்யுங்கள் ,
அவர்களின் உணவு தட்டினை அவர்களை எடுத்து வந்து உணவை வாங்கி , தானாக் உண்ண செய்யுங்கள்
அவர்கள்
தலை சீவுவது,
காலணி அணிவது ,
அதற்கான பாலிஷ் போடுவது ,

வார விடுமுறைகளில் ,

வீட்டின் சுற்றங்களை சுத்தம் செய்தல்,
செடிகளுக்கு நீர் பாய்ச்சுதல் ,
கார் (அ) பைக் கழுவ உதவுதல் ,
படுக்கை உறை மாற்றுதல் ,
வாஷிங் மெசினில் அவர்கள் துணிகளை எடுத்து போடுதல் ,
வெயிலில் காய்ந்த துணிகளை மடித்து வைத்தல் ,
சமையலுக்கு காய்கறி கழுவுதல் ,
குளிர்சாதன பெட்டியை சுத்தம் செய்தல் ,
சமையலறை பொருட்களை அடுக்குதல் ,

என சின்ன சின்ன வேலைகளை வார கடமையக்கிடுங்கள் ,

அவர்களை அன்றாட வாழ்வியலிலிருந்து அன்னியப்படுத்திடாதீர்கள் ,

இவ்வனைத்திற்கும் ஒரு அழகான சன்மானம் வாராவாரம் வழங்கிடுங்கள் ,

அவர்கள் விரும்பும்படி ஏதேனும் ஓர் ஹாபி அமைத்துகொடுத்தல் ,

மீன் தொட்டி
பறவை ,
நாய்குட்டி ,
புறாக்கள் ,
பூச்செடி கொடிகள் ,

அவைகளை பராமரித்திட செய்யுங்கள் ,

முடிந்தவரை

வீட்டில் இருக்கும் நேரங்களில்

தொலைக்காட்சி 📺
கணினி விளையாட்டுக்கள்,
திரைப்படங்கள்
உணவக உணவுகள் என அவர்களின் எண்ணங்களை செயற்கையான விடயத்திலிருந்து ,இயல்பான நம் அன்றாட தினசரி வேலைகளில் ஈடுபட செய்யுங்கள்

இன்று பல கல்லூரி மாணவர்கள் , அதிலும் முக்கியமாக மருத்துவம் பயிலும் மாணாக்கர் கூட தற்கொலை வரை சுலபமாக முடிவெடுத்து சென்றிடும் மிக முக்கிய காரணம் ,

தம்மையும் தம் சுற்றத்தினையும் பேணிட அறியாததால் மட்டுமே !!!

குழந்தைகள் ஒன்றும்.வீட்டில் வளர்க்கும் ஆர்க்கிட் பூச்செடி அல்ல பொத்தி , பொத்தி , உரம் போட்டி , நீர் ஊற்றி வளர்க்க ,

சிறு வெப்ப நிலை மாறினாலும் அது .வாடிப்போய் இறந்துவிடும்

மாறாக

அவர்கள் காட்டு மரங்கள் போல் வளர்ந்திட வேண்டும் ,

முறையான வழிகாட்டுதலும் ,அரவணைப்பும் , அக்கறையும் மட்டுமே இருத்தல் வேண்டும்

அதீத ஆர்வமும் ,
தேவையற்ற கரிசனையும் ,
எல்லை மீறிய அன்புபாராட்டுதலும் அவர்களுக்கு நிச்சயமாக நன்மை இல்லை ,

வாழ்க வளமுடன்...

No comments:

Post a Comment