உடல் நலம் : உழைப்பின் அருமையை பிள்ளைக‌ளுக்கு உணர்த்துவது எப்படி...?

Wednesday, November 27, 2019

உழைப்பின் அருமையை பிள்ளைக‌ளுக்கு உணர்த்துவது எப்படி...?

உழைப்பின் பலன்.

ஒரு பணக்கார தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம். சம்பாதிக்கும் வயது வந்தும் இன்னும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை எண்ணி எப்போதும் வருத்தப்பட்டார்.

ஒரு நாள் பொறுக்கமாட்டாமல் தினம் நூறு ரூபாய் சம்பாதித்துக் கொண்டு வந்தால்தான் இனி வீட்டில் தங்க முடியும் என்று கண்டித்தார்.

மறுநாள் வீட்டிற்குள் நுழையும்போது பையன் நூறு ரூபாய் எடுத்து நீட்டினான்.

அவனுடைய அப்பா அங்கே எரிந்து கொண்டிருந்த விளக்கில் காட்டி பணத்தை எரிய விட்டார். போய் சாப்பிடு என்றார்

மறுநாளும் உள்ளே நுழையும்போது அவன் கொடுத்த நூறு ரூபாயை விளக்கில் எரியவிட்டார்.

மூன்றாவது நாள் பணத்தை விளக்கில் காட்டி எரிய விடும் போது மகன் தாவி அதை அணைத்தான். அப்பா என்ன செய்கிறீர்கள் என்று அலறினான்.

அவர் சொன்னார், "இன்றுதான் உண்மையில் நீ உழைத்து சம்பாதித்து பணம் கொண்டு வந்திருக்கிறாய்"

ஆச்சரியமடைந்த ம‌க‌ன் "எப்படி கண்டு பிடித்தீர்கள்" என்றான்.

நீ உழைத்து சம்பாதிக்காத ப‌ள‌ம் கரியானபோது நீ கவலைப் படவில்லை அதுவே உன் உழைப்பு என்கிறபோது நீ துடித்துவிட்டாய்.... போய் சாப்பிடு.

"உழைப்பின் அருமையும் பணத்தின் அருமையும் தெரிந்ததால் இன்று நீ சாப்பிடுகிற சாப்பாடு கூடுதல் சுவையாக இருக்கும்"  என்றார் மலர்ந்த முகத்தோடு.

இன்றைய நம் குழந்தைகள் பலரின் நிலைமையும் இதுதான்...

பிள்ளைக‌ளுக்கு க‌ல்வி ம‌ட்டும‌ல்ல‌, உழைக்க‌ க‌ற்றுக்கொடுப்ப‌தும் ந‌ம் க‌ட‌மை.

நூறு ரூபாய் உங்க‌ள் பிள்ளை கேட்டால்,உங்க‌ள் கார் அல்ல‌து பைக்கை க‌ழுவ‌ சொல்லுங்க‌ள்.

பாக்கெட் ம‌ணி கேட்டால் பாத்திர‌ங்க‌ளை க‌ழுகி வைக்க‌ சொல்லுங்க‌ள்.

டூர் போக‌ ப‌ண‌ம் கேட்டால் வீடு முழுவ‌தையும் அழ‌கால‌ சுத்த‌ம் செய்ய‌ சொல்லுங்க‌ள்.

உழைப்பின் அருமையை சிறு வ‌ய‌து முத‌லே ஊட்டி வ‌ள‌ருங்க‌ள்.

உழைப்பின் அருமை தெரிந்த‌ எந்த‌ ம‌னித‌னும் வீண்போக‌ மாட்டான்.... உ‌ட‌லாலும், ம‌ன‌தாலும்

இன்று உங்க‌ள் குழ‌ந்தைக்கு "செல்ல‌ம் கொடுத்து" கெடுத்துவிட்டு நாளை வ‌ருந்தாதீர்க‌ள்.

No comments:

Post a Comment