உடல் நலம் : November 2019

Wednesday, November 27, 2019

அன்றாட வீட்டு வேலைகளில் உதவிடும் குழந்தைகள் தாம் வாழ்வில் மிகச்சிறந்த வெற்றியடைய முடியும் !!!!

நிதர்சனமான உண்மை !!!

உழைப்பின் அருமையை பிள்ளைக‌ளுக்கு உணர்த்துவது எப்படி...?

உழைப்பின் பலன்.

ஒரு பணக்கார தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம். சம்பாதிக்கும் வயது வந்தும் இன்னும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை எண்ணி எப்போதும் வருத்தப்பட்டார்.

ஒரு நாள் பொறுக்கமாட்டாமல் தினம் நூறு ரூபாய் சம்பாதித்துக் கொண்டு வந்தால்தான் இனி வீட்டில் தங்க முடியும் என்று கண்டித்தார்.

மறுநாள் வீட்டிற்குள் நுழையும்போது பையன் நூறு ரூபாய் எடுத்து நீட்டினான்.

அவனுடைய அப்பா அங்கே எரிந்து கொண்டிருந்த விளக்கில் காட்டி பணத்தை எரிய விட்டார். போய் சாப்பிடு என்றார்

மறுநாளும் உள்ளே நுழையும்போது அவன் கொடுத்த நூறு ரூபாயை விளக்கில் எரியவிட்டார்.

மூன்றாவது நாள் பணத்தை விளக்கில் காட்டி எரிய விடும் போது மகன் தாவி அதை அணைத்தான். அப்பா என்ன செய்கிறீர்கள் என்று அலறினான்.

அவர் சொன்னார், "இன்றுதான் உண்மையில் நீ உழைத்து சம்பாதித்து பணம் கொண்டு வந்திருக்கிறாய்"

ஆச்சரியமடைந்த ம‌க‌ன் "எப்படி கண்டு பிடித்தீர்கள்" என்றான்.

நீ உழைத்து சம்பாதிக்காத ப‌ள‌ம் கரியானபோது நீ கவலைப் படவில்லை அதுவே உன் உழைப்பு என்கிறபோது நீ துடித்துவிட்டாய்.... போய் சாப்பிடு.

"உழைப்பின் அருமையும் பணத்தின் அருமையும் தெரிந்ததால் இன்று நீ சாப்பிடுகிற சாப்பாடு கூடுதல் சுவையாக இருக்கும்"  என்றார் மலர்ந்த முகத்தோடு.

இன்றைய நம் குழந்தைகள் பலரின் நிலைமையும் இதுதான்...

பிள்ளைக‌ளுக்கு க‌ல்வி ம‌ட்டும‌ல்ல‌, உழைக்க‌ க‌ற்றுக்கொடுப்ப‌தும் ந‌ம் க‌ட‌மை.

நூறு ரூபாய் உங்க‌ள் பிள்ளை கேட்டால்,உங்க‌ள் கார் அல்ல‌து பைக்கை க‌ழுவ‌ சொல்லுங்க‌ள்.

பாக்கெட் ம‌ணி கேட்டால் பாத்திர‌ங்க‌ளை க‌ழுகி வைக்க‌ சொல்லுங்க‌ள்.

டூர் போக‌ ப‌ண‌ம் கேட்டால் வீடு முழுவ‌தையும் அழ‌கால‌ சுத்த‌ம் செய்ய‌ சொல்லுங்க‌ள்.

உழைப்பின் அருமையை சிறு வ‌ய‌து முத‌லே ஊட்டி வ‌ள‌ருங்க‌ள்.

உழைப்பின் அருமை தெரிந்த‌ எந்த‌ ம‌னித‌னும் வீண்போக‌ மாட்டான்.... உ‌ட‌லாலும், ம‌ன‌தாலும்

இன்று உங்க‌ள் குழ‌ந்தைக்கு "செல்ல‌ம் கொடுத்து" கெடுத்துவிட்டு நாளை வ‌ருந்தாதீர்க‌ள்.

அழகு குறிப்புகள்:அழகு டிப்ஸ்… டிப்ஸ்…



சமையலின்போது செய்யும் 5 மோசமான தவறுகள்:



சமையலில் உப்பை அதிகமாக சேர்த்து விடுவதோ,
காரத்தை அளவு தெரியாமல் போட்டுவிடுவதோ தவறு அல்ல. அது அப்போதைய சமையல் ருசியை மட்டுமே கெடுக்கும்.

ஆனால்..
அதையும் விட நமக்கு தவறு என்று தெரியாமல்
வெறும் ருசிக்காகவும், அழகுக்காகவும் சிலதவறுகளை செய்து விடுகிறோம்.அதனால் நமது உடல் ஆரோக்கியமும் பாதிக்கிறது.

1. எந்த உணவு பொருளையும் கழுவாமல் பயன்படுத்தவே கூடாது.
உதாரணத்துக்கு
சிலர் புளியை தண்ணீர் ஊற்றி கரைப்பார்கள். ஆனால், அதையும் ஒரு முறை தண்ணீர் சேர்த்து அலசி கீழே ஊற்றிவிட்டு, அடுத்து நீர் ஊற்றி கரைத்துக்
கொள்ளலாம். இதே போல, முட்டைகளை நன்கு கழுவிவிட்டு வேகவைக்க வேண்டும். கீரையை 2
முறையாவது கழுவ வேண்டும்.

2. கோழிக்கறியை சமைக்கும் முன்பு அலசும்போது எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அதாவது,
கோழிக்கறியில் தண்ணீரை ஊற்றும் போது அதில்
இருந்து தெளிக்கும் தண்ணீர்படும் இடங்களில் எல்லாம்பாக்டீரியாக்கள் பரவும்என்பதை மறக்கக் கூடாது.அலசும் போது மஞ்சள் தண்ணியில் அலசினால் கோழி கறியில் உள்ள நச்சுக்கள் வெளியேறிவிடும். 

மேலும்,
கோழிக்கறியை அலசி கீழே விடும்தண்ணீர் நேராக வெளியேற்றப்படவேண்டும். அதில் ஏராளமான பாக்டீரியாக்கள் இருக்கும்என்பதால் கவனமாக அந்த
நீரை வெளியேற்ற வேண்டும்.

3. எந்த உணவு பொருளையும்அதிக நேரம் வதக்கவோ, கருகவைக்கவோ கூடாது.எல்லோருக்குமே உணவு பொருள்என்பது நன்கு சிவந்து இருக்கவேண்டும்
என்று விரும்புவார்கள்.ஆனால், அது உடல்நலனுக்கு தீமையை ஏற்படுத்தும்.எனவே, எந்த உணவையும்
அதிகமாக வதக்கி கருக வைக்கவேண்டாம். கருகிய
அல்லது தீய்ந்த உணவு பொருள்புற்றுநோயை ஏற்படுத்தும்.

4. காலையில் வேகமாக சமைக்கவேண்டும் என்பதால் பலரும்வெங்காயத்தை இரவே நறுக்கி வைத்துக்
கொள்வார்கள். அது மிகப்பெரியதவறாகும்.
வெங்காயத்துக்கு கிருமிகளை கவர்ந்திழுக்கும்குணம் உள்ளது. அதனால்,வெங்காயத்தை நறுக்கியதும்,
அது காற்றில் இருக்கும்அனைத்து கிருமிகளையும்
கவர்ந்திழுத்து வைத்துக்கொள்ளும். கிருமிகள் நிறைந்தவெங்காயத்தைத் தான் நாம்மறுநாள் உணவுக்குப்பயன்படுத்துகிறோம் என்பதை மறவாதீர்.

5. மேலும்,இஞ்சியை தோலோடு சமைக்கக் கூடாது. கீரையோடு புளி சேர்க்கக்கூடாது.கோழிக்கறியை எடுத்து வைத்து மறு நாள்சாப்பிடக் கூடாது. நான்ஸ்டிக்
தவாவை இரும்பு தேய்ப்பானைப் பயன்படுத்தி தேய்த்துக் கழுவக்கூடாது. விரதநாட்களை தவிர்த்து,
சமைத்து ருசி பார்த்துவிட்டுத்தான் சமையலை முடிக்க வேண்டும்.

"நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் "

பெற்றோரோடு சிறுவர்களை தூங்கவைக்கலாமா?

உணர்ந்தவன் உயர்வான்!! -படித்ததில் பிடித்தது


1. தவறோ, சரியோ..
தைரியமாக எதையும்
வெளிப்படையாக பேசக்கூடியவர்கள்
யாருக்கும் துரோகியாக மாற மாட்டார்கள்..!!

2.மனிதன் இறுதியாக
இறப்பதற்கு இடையில்
மனதால் பலமுறை இறந்துவிடுகிறான்..!
சிலநேரம் மனிதர்களால்..!
சிலநேரம் மாற்றங்களால்..!

 3.வாழ்க்கையில் தோற்றவர்கள்
இரண்டு பேர்..!
ஒருவர் யார் பேச்சையும்
கேட்காதவர்..!
மற்றொருவர் எல்லோர் பேச்சையும்
கேட்பவர்...                                             

4.பணத்தால் கிடைக்கும் புகழ்
நம்மிடம் பணம் இருக்கும் வரை மட்டுமே நிலைக்கும்..!
குணத்தால் கிடைக்கும் புகழ்
இறந்த பின்னும் நிலைக்கும்..!!

5.இரக்கத்தையும், உறக்கத்தையும், அளவோடு பயன்படுத்துங்கள்..!
அதிகமாக உறங்குபவன் *சோம்பேறி..!*
அதிகம் இரக்கம் காட்டுவான் *ஏமாளி..!!*

6.ஒருவருடன் பேசும்போது
நீங்கள் என்ன அர்த்தத்தில்
பேசுகிறீர்கள் என்பதைவிட..!
நீங்கள் கூறுவதை
அவர் எந்த அர்த்தத்தில்
புரிந்து கொள்கிறார்
என்பதை கவனித்து பேசுங்கள்..!

7.வெற்றியின் போது
கை தட்டும் அந்த
பத்து  விரல்களை விட..!
தோல்வியின் போது கண்ணீர் துடைக்கும்
அந்த ஒரு விரலுக்கு தான்
மதிப்பு அதிகம்..!

8. சிலபேர் நமக்காக நிறைய செய்வாங்க..
ஆனால்..!
ஒன்னும் பண்ணாத மாதிரி காட்டிப்பாங்க..!
அந்த அன்பை
என்ன விலை கொடுத்தாலும்
வாங்க முடியாது..!

9.நீங்கஆசைப்பட்ட வாழ்க்கையை
உன் இஷ்டம்போல் வாழ்ந்து விடுங்கள் ..!
பிறர் சொல்வதைக்கேட்டு
உங்கள் ஆசைகளை
அடமானம் வைத்து விடாதீர்!
பின்பு மீட்கமுடியாது
உங்கள் வாழ்வில்
நீங்கள் தொலைத்த ஆசைகளை..! ஆனால் அந்த ஆசைகள் பிறர் குடியை கெடுப்பதாய் இருக்க கூடாது.

10. பலர் இன்னும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருப்பது
திறமை இல்லாமல் அல்ல..!
நேர்மையான எண்ணங்கள்
நியாயமான வாழ்க்கை முறை கூட இருக்கலாம்..

11.வசதியாக வாழ்வதற்கு தான் *வருமானம்* தேவை..!தகுதியோடு வாழ *தன்மானம்* இருந்தால் போதுமானது. உங்களை

12.வெறுப்பவர்களை நினைத்து கவலை கொள்ளாதே..!
அவர்களுக்கு உங்கள் அன்பை பெற
தகுதி இல்லை என
நினைத்து கொள்ளுங்கள்..!

13.என்னடா வாழ்க்கை இது
என்று நினைப்பதை விட,
இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை
என்று எண்ணி வாழுங்கள்
வெற்றி நிச்சயம்..!

14.பலசாலிகள் என்று யாரும் இல்லை..!
மற்றவர்களின் பலவீனத்தை சரியாக பயன்படுத்தி கொண்டு தான்
இங்கே பலபேர் பலசாலிகளாக காட்டுகிறார்கள்..!

15.செய்யும் செயலை
முழு மனதோடு செய்யுங்கள்..!
வெற்றி கிடைக்கவில்லை என்றாலும்
நிச்சயம் நிம்மதி கிடைக்கும்..!

16.உறுதியான
உள்ளம்
உடையவருக்கு..!
ஒவ்வொரு
விடியலும்
பொற்காலமே..!         

17.உள்ளே தள்ளும் உணவு
ருசியாக இருக்க வேண்டும்
என்று நினைக்கும் நாக்கு..!
வெளியே தள்ளும்
வார்த்தையில் மட்டும்
எதையும் நினைப்பதில்லை..!       

18.மற்றவர் தோள் மீது
ஏறி நின்று
தன்னை உயரமாக காட்டி கொள்வதை விட,
தனித்து நின்று
தன் உண்மையான உயரத்தை
உலகிற்கு காட்டுவதே சிறந்தது..!

19.வாழ்க்கை எப்படி வேண்டும் என்றாலும் மாறட்டும்..!
எண்ணங்கள் அடுத்தவரை காயப்படுத்தாமல் இருக்கட்டும்..!

20.இதுவும் கடந்து போகும்..!
ஆனால்..
எதுவும் மறந்து போகாதே..!           

21.வெற்றி நிரந்தரமல்ல..
தோல்வியும் நிரந்தரமல்ல..
இன்பம் நிரந்தரமல்ல..
துன்பமும் நிரந்தரமல்ல..
என்றும் நிரந்தரமாய் விளங்குவது
சிரிப்பும் மற்றவர் மீது நம் காட்டும் அன்பும் தான்..!                                   

22.பிரச்சனை சிறிதோ, பெரிதோ
தனியாக சமாளித்து கொள்ள பழகு..!
அப்போதுதான்
உன் பலம் என்ன
பலவீனம் என்ன
என்பதை உன்னால்
அறிய முடியும்..!                                             

23.அடியே படாமல் வலிக்க செய்வது வார்த்தைகள் மட்டுமே..!
மருந்தே இல்லாமல் காயத்தை குணப்படுத்துவது
அன்பான ஆறுதல் மட்டுமே..! 

24.வெற்றியே
மகிழ்ச்சி
என்று
நினைக்காதே..!
மகிழ்ச்சியாய்
இருந்தாலே
வெற்றி
என்று நினை..!

25. ஓட்டமிடும் உன் வாழ்வை,
நோட்டமிடும் உலகம் இது,
மறந்துகூட விழுந்து விடாதே..!
மாண்டு விட்டான் என்று சொல்லி,
மண்ணிற்குள் புதைத்து விடுவார்கள்..!! பிறரை குறைத்து பேசி
உன் மதிப்பை கூட்ட நினைக்காதே..!
அப்படி செய்வதால்
கூடுவது உன் தலைகணமே தவிர
மதிப்பல்ல..!
உணர்ந்தவன் உயர்வான்..!


இரவில் வறட்டு இருமல் சரியாக இயற்கை வைத்தியம் ..!

திரிபலா பொடியை இரவில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...!!

Monday, November 25, 2019

நேர்மறை எண்ணங்களை வளர்க்க என்ன செய்ய வேண்டும் ?

*பாசிட்டிவ்வாக இருப்பவர்களோடு பழகுங்கள்*

நம்மைச் சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம். எனவே எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் வைத்துக் கொள்ளாதீர்கள்.

*"தெரியாது', "நடக்காது', "முடியாது' , "கிடைக்காது'* என சொல்பவர்களை விரட்டி விடுங்கள்.

*உற்சாகமாக இருங்கள்*
சோகத்தை விட்டொழியுங்கள்.
எப்போதும் உற்சாகம் கொப்பளிக்க வேலையையும் செய்யுங்கள்.
இந்த வேலையைச் செய்ய வேண்டுமே என செய்து முடிக்காமல், *இந்த வேலையை நம்மை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்து விட முடியாது* என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணி வேலை பாருங்கள்.

*பவர்ஃபுல்லாக உணருங்கள்*
உடல் வலிமை,
பண வலிமை எல்லாவற்றையும் தாண்டி
*மனவலிமை மிக முக்கியம்.*
உங்களைப் போல இந்த உலகத்தில் பவர்ஃபுல்லானவர் யாருமில்லை.
உடனே சிரிக்காதீர்கள். இது தான் நிஜம். *உங்களின் பெஸ்ட் எது என்பது உங்களுக்கே இன்னும் தெரியவில்லை.*

உங்கள் வலிமையை உணர்ந்து செயலாற்றினால் நீங்கள் வேற லெவல் ஆள் பாஸ்.

*நேசியுங்கள்.*
உங்களை நீங்களே நேசியுங்கள்.
இந்த உலகத்தில் தன்னை நேசிக்காத மனிதனால் வெற்றியடையவே முடியாது.
உங்களை உங்களுக்குப் பிடிக்க, உங்களை எப்படி மாற்ற வேண்டுமோ அப்படி மாற்றுங்கள்.

உங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள். நீங்கள் புறப்பட்டு எழுந்தால் உங்களை வெல்ல யாருமே இல்லை என்பதை உங்கள் மனதுக்குப் புரிய வையுங்கள்.

உங்களைப் போல அழகானவர் யாரும் இல்லை,
உங்களைப் போல திறமையானவர் யாரும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் உங்களுக்கே, நீங்களே நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

*பயணப்படுங்கள்*.
வாழ்க்கை ஒரு பயணம். அடுத்த நிமிடம் உங்களுக்கு என்ன நடக்கும் என உங்களுக்கே தெரியாது.
இந்த நீண்ட நெடும் பயணத்தில் ஒரு சிலருக்கு வெற்றி எளிதில் வரும், சிலருக்கு *தாமதமாக* வரும். அதற்காக சோர்ந்து விடக்கூடாது. வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து அதை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருங்கள்.

*வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது.* ஆனால் பாசிட்டிவ் எண்ணத்துடன் தொடர்ந்து பயணம் செய்தால் உங்களுக்கு வெற்றியுடன், *உங்கள் பயணம் மகிழ்ச்சியாகவும், உங்களுக்கு பிடித்தமானதாகவும் இருக்கும்.*

இடுப்பு வலி வேதனை - சிறந்த மருத்துவம்

பிரசவத்திற்கு பின்னர் மாதவிடாய் ஏற்படும் மாற்றங்கள்



Saturday, November 23, 2019

ஸ்ரீகிருஷ்ணரின் தலையில் நீங்கா இடம் பிடித்த மயிலிறகு...!!

திருமணம் நடக்க 16 வாரம் தீபமிடுங்க!

வாழை இலை பரிமாறும்போது எப்படி போடுவது..?

சுயமரியாதை!



ஹோட்டல் ஒன்றிற்கு அப்பா தனது இரு மகன்களை அழைத்து வருகிறார்...! வந்தவர் அந்த இரு சிறுவர்களிடம் என்ன வேண்டும் என்று கேட்காமலே மூவருக்கும் இட்லி கொண்டு வர சொல்கிறார்...!

 சிறுவர்கள் இட்லி வேண்டாம் அப்பா! சப்பாத்திதான் வேண்டும் என்கின்றனர்...! அப்பா இட்லி போதும் ...! இதைச் சாப்பிடுங்கள் என்கிறார்...! அப்பாவிடம் சப்பாத்தி வாங்க பணமில்லை என்ற விவரம் தெரியாமல் இட்லி சாப்பிட தயங்குகின்றனர் சிறுவர்கள்..!

அந்த சமயத்தில் படித்த பணக்கார இளைஞன் ஒருவன் சாப்பிட வருகிறான்...! அவனைக் கண்டதும் சர்வர் வாங்க சார் என்று வரவேற்று என்ன வேண்டும் சார் என்று கேட்கிறான்...!

இளைஞன் நெய் ரோஸ்டுக்கு ஆர்டர் கொடுக்கிறான்...! சர்வர்  மணக்க  மணக்க நெய் ரோஸ்ட் கொண்டுவந்து வைக்கிறான் ...! அப்போதுதான் தன் அருகில் இருக்கும் சிறுவர்களையும் அவர்களது அப்பா வையும் கவனிக்கிறான் இளைஞன்...!

உடனே சர்வரை அழைத்து என்னப்பா நெய் ரோஸ்ட் ! வாயிலேயே வைக்க முடியலியே! இதை எடுத்துட்டு போ! போயி இந்த சிறுவர்களுக்கு வைத்தது போல எனக்கும் இட்லி கொண்டு வா என்கிறான்...!

சார்.! நல்ல நெய் சார்...,! உங்களுக்காக ஸ்பெசலாக போட்டது என்கிறான் சர்வர்...!
ஏய் ! நான் சொன்னதைச் செய் என்கிறான் இளைஞன்...!
சர்வரும் நெய் ரோஸ்டை எடுத்துக் கொண்டு போய், இட்லி கொண்டு வந்து வைக்கிறான்...!

இளைஞன் மகிழ்வோடு இட்லியை சாப்பிடுகிறான்...!
இதைப் பார்த்த அந்த சிறுவர்களும் இட்லியை ஆவலுடன் சாப்பிடுகின்றநர்.

ஆனால் இதில் எவ்வளவு தத்துவங்கள் அடங்கி இருக்கின்றன..!
அந்த இளைஞன் நினைத்தால் அந்த சிறுவர்களுக்கும் நெய் ரோஸ்ட் வாங்கி கொடுத்திருக்க முடியும்...!

அப்படி செய்தால் அந்த அப்பாவின் சுய மரியாதைக்கு பங்கம் ஏற்பட்டிருக்கும்...! அப்பாவின் இயலாமையை எடுத்து காட்டுவதாக அமையும்...! அப்பாவின் மேல் சிறுவர்களுக்கு மதிப்பு குறையும்...!

இவ்வளவும்  அந்த இளைஞனின் செயலால் காப்பாற்ற பட்டு விட்டன !
இது பணக்கார இளைஞர்கள் பண்பாட்டை,பிறரின் சுய மரியாதையை எப்படி காக்க வேண்டும் என்பதற்கு ஒரு பாடம்...!

படித்ததில் பிடித்ததை பகிர்கிறேன்.

கர்ப்பத்திற்கு முந்தைய அறிகுறிகள்


போராட்டமே வாழ்க்கையாய் வாழ்க்கையே போராட்டமாய் வாழும் ரஜினி கலையரசன்

Wednesday, November 20, 2019

உளுந்தின் மருத்துவபயன்கள்


கண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை...



கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது, நம் கண்ணாடி அணிகிறோம் இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல்ல நாள் செல்ல அதிகரிக்கிறதா? அல்லது குறைகிறதா? கண்டிப்பாக அதிகரிக்கிறது, இதிலிருந்து என்ன புரிகிறது, கண்ணாடியின் பவர் அதிகமாகிறது என்றால் உங்கள் கண்ணினுடைய பவர் குறைகிறது என்று அர்த்தம்.

பாதி கெட்டுப்போன கண்ணை முழுவதுமாகக் கொடுப்பதற்குக் கண்ணாடி அணிய வேண்டுமா? இது என்ன மருத்துவம்? கண்ணில் நோய் வந்தால் குணப்படுத்துவதற்கு வைத்தியர் தேவையா? நோயை அதிகப்படுத்துவதற்கு வைத்தியர் தேவையா?

கிட்டப்பார்வை, தூரப்பார்வை சரி செய்ய நமது உடலுக்கே தெரியும் அதற்குத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் கெட்டுப் போய் உள்ளன, இது முதல் காரணம்.

இரண்டாவது கண் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் இல்லை.

மூன்று இரத்தத்தின் அளவு குறைவாக உள்ளது.

நான்கு கண் கெட்டுப்போய் விட்டது என்று, நம் மனது கெட்டுப்போய் விட்டது.

ஐந்து நம் உடலிலுள்ள கண்ணைக்  அறிவு கெட்டுப் போய்விட்டது.

கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, குளுகோமோ, புரை மற்றும் பல நோய்களுக்கான காரணம் கண்ணில் கிடையாது.

இரத்தத்தில் தான் நோய் எந்த மருந்தும், மாத்திரையும், அறுவைசிகிச்சை செய்யாமல் கண்ணாடி அணியாமல் கண்ணில் வரும் நோய்களைக் குணப்படுத்த முடியும்.

எனவே நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், கண்ணில் வரும் அனைத்து நோய்களுக்கும் கண் காரணம் கிடையாது. இரத்தத்தில் தான் நோய், அதிலும் மேலே சொல்லப்பட்ட ஐந்தும் தான் காரணம்.

இந்த ஐந்தையும் சரிப்படுத்துவதன் மூலமாக நமது நோய்களை நாமே குணப்படுத்திக் கொள்ளலாம்.

கண் பார்வை குறைபாடு நீங்க
முருங்கைப் பூவுடன் பசும்பாலை சேர்த்து நன்றாக காய்ச்சி காலை மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகமாகும்; கண் பார்வை குறைபாடு நீங்கும்.

கண்ணில் வெள்ளெழுத்து நோய் உள்ளவர்கள் முருங்கைப் பூ பொடியுடன் தேன்கலந்து அருந்தி வந்தால் வெள்ளெழுத்து மாறும்.

கண்ணில் உருவாகும் வெண்படலமும் மாறும். முருங்கை பூவை பாலில் வேகவைத்து – பிறகு அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும்.

இரவு உணவுக்குப் பின் கை, வாய் இவைகளை கழுவிய பின் ஒவ்வொரு கண்ணிலும் மூன்று மூன்று துளிகள் சுத்தமான நீர்விட்டு இமைகளை மென்மையாக தேய்த்து சந்திர தரிசனம் (நிலவைப் பார்த்தல்) செய்தல் மிகவும் நல்லது.

வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. இதனால் கண் நரம்புகள் சூடு குறைந்து பார்வையை தெளிவுபெறச் செய்யும்.
முதுமைக் காலத்தில் கண்டிப்பாக தலைப்பாகை, செருப்பு அணிந்து நடத்தல் வேண்டும்.

இரவு படுக்கைக்குச் செல்லும் முன் உள்ளங்கால்களில் பசுநெய்யை நன்றாக தேய்த்து, அரிசித் தவிட்டை நன்றாக அதன்மேல் தடவி பின்பு பாதங்களை பருத்தியினாலான துணி வைத்து கட்டிவிடவும். விடியற்காலையில் எழுந்தவுடன் கட்டை அவிழ்த்து இரு பாதங்களையும்
குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

மதிய உணவில் பண்ணைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை, காரட் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இரவில் பால் சாதம் சாப்பிடுவது நல்லது.
இரவு உணவுக்குப்பின், பால், பழம் சாப்பிடுவது நல்லது.

ஒருவேளை உணவில் நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

நான்கு மாதத்திற்கு ஒருமுறை பேதி மருந்து , மாதம் ஒருமுறை நசிய மருந்து பயன்படுத்தினால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும்.

பித்தத்தை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்கவும். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உச்சி வெயிலில் அலையக் கூடாது.

பொதுவாக கண்களில் வரும் நோய்களில், வயதானவர்களுக்கு காணப்படுவது கண்புரை. இதை ஆங்கிலத்தில், “காட்டிராக்ட்” என்பர்.

கண்களில் உள்ள லென்ஸ், ஒளி அனுப்பும் தன்மையை இழக்கிறது. இதனால், கண்பார்வை குறைகிறது.

பிறந்தது முதல், கண் லென்ஸ் ஒளிக்கதிர்களை விழித்திரைக்கு அனுப்பி, கண் பார்வை தருகிறது. கண்புரை ஏற்பட்டபின் இது மாறுபடுவதால், பார்வை குறைவு ஏற்படுகிறது. கண் புரை நோய், 40 வயது முதல் துவங்கலாம்.
முதலில், தூரப்பார்வை குன்றுதல், வாகனங்கள் ஓட்டுவதில் சிரமம் மற்றும் பார்வை தன்மை குறைபாடு ஆகியவை உண்டாகும். கண்ணாடி நம்பர் அடிக்கடி மாறக்கூடும்.

இவ்வாறு ஏதேனும் பிரச்னை இருந்தால், கண் மருத்துவரிடம், கண் புரை நோய் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

கண் புரையை, அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும்.
கண் பார்வை குறைபாடு அறுவை சிகிச்சை இல்லாமலே சரி செய்யலாம் ....

வீட்டில் எல்லோரும் செய்யக்கூடிய ஒரு எளிய முறை ஒன்று சொல்லப் போகிறேன்..

நாம் நம் பூஜை அறையில் தினமும் தீபம் ஏற்றுவோம்.
அந்த தீப ஒளியை தினமும் 15 நிமிடம் பார்த்து வந்தால் பல நன்மைகளை அடையலாம்.
அந்த தீபத்தில் இருந்து வரும் ஒளியை கண் அசைக்காமல் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் போது, நமது மனமும் அடங்கும், கண்களுக்கும் மிகவும் நல்லது.

கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை, கண் எரிச்சல் போன்ற பல நோய்கள் சரியாகும். எவ்வளவு மனம் பாரமாக இருந்தாலும் சரி குறைந்துவிடும்.

பல பிரச்சனைகளுக்கு பதில் கிடைக்கும் என்பது மிகப்பெரிய உண்மையாகும். நமக்கே தெரியாமல் அதில் இருந்து நிறைய சக்திகள் நமக்கு கிடைக்கும். அந்த சக்தி என்ன மாற்றத்தை தரும் என்பதை பற்றி கூறுகிறேன்.

1. மனக் கவலை தூள் படும்.

2. முடிவு எடுக்கும் திறன் ஏற்படும்.

3. கண்கள் புத்துணர்ச்சி பெறும்.

4. நாம் புதிய தெம்புடன் காணப்படுவோம்.

5. ஆசைகள் நம்மை அடக்குவது போய், நாம் ஆசைகளை அடக்கிவிடுவோம்.

6. ஒரு புதிய மனிதராய் காணப்படுவோம்.

7. ஒற்றைத் தலைவலி சரியாகும்.

எனவே எல்லோரும் இதை தினமும் குறைந்தது 15 நிமிடம் அதற்கு மேலும் செய்யலாம். தொடர்ந்து செய்து வந்தால் பலன் அடைவது நிச்சயம்.

கோரைக்கிழங்கின் மருத்துவ பயன்கள்:

அன்புக் குழந்தையே!

நம் குழந்தைகளிடம் கையாள வேண்டிய உளவியல் உண்மைகள்-


Saturday, November 16, 2019

பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்



தெரிந்து கொள்வதற்காக இதோ எளிய வீட்டு உபயோகக் குறிப்புகள்:
பாதுகாப்பு:

தீப ஒளியை பார்ப்பதால் ஏற்படும் நன்மைகள்

பணக்கார கடவுளான குபேரனுக்கு பணக்கஷ்டம் வந்த போது என்ன செய்தார் தெரியுமா..?



சங்குப்பூ – மருத்துவ பயன்கள்



சங்குப்பூ
சங்குப்பூ இலைகள் துவர்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை, சிறுநீர் பெருக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும்; உடல் வெப்பத்தைத் தணிக்கும்; வாந்தி உண்டாக்கும்; பேதியைத் தூண்டும்; தலை நோய், கண் நோய்கள், மந்தம் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும்.

அற்புத பலன்களை தரும் கோ பூஜை

Wednesday, November 13, 2019

காய்ச்சல் குணமாக என்ன செய்யலாம்

மூட்டு ஜவ்வு (ligament tear) பாதிப்பை சரி செய்ய...


உடலில் தேங்கிய கழிவுகளை நீக்கும் முறைகள்!




1. மூன்று மாதத்திற்கு ஒரு முறை பேதிக்கு மருந்து சாப்பிட வேண்டும்.

2. எனிமா (Enima) மாதத்தில் இரண்டு முறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

3. கண்களை ஒரு நாளுக்கு ஐந்து முறை கழுவ

4. மாதம் இரண்டு முறை மூக்கை கழுவ வேண்டும்.

5. தினமும் ஒரு முறை நல்லெண்ணையில் வாய் கொப்பளிக்க (Oil Pulling செய்ய) வேண்டும்.

6. வாழை இலை குளியல் மாதம் ஒருமுறை எடுத்துக் கொள்ளலாம்.

7. மண் குளியல் மாதம் ஒருமுறை எடுத்துக் கொள்ளலாம்.

8. விரதம் மாதம் ஒருமுறை இருக்கலாம்.

9. மௌனம் மாதம் ஒருமுறை இருக்கலாம்.

10. எப்ப எல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் ஓய்வு எடுக்க (சும்மா இருக்க) வேண்டும்.

11. சூரியனை தினமும் ஐந்து நிமிடம் பார்க்க வேண்டும்.
.

நன்றி - பாஸ்கர் ஐயா 

Monday, November 11, 2019

ஒரு நிமிடக்கதை : மனிதாபிமானம் !



“சிவா எங்கே இருக்கீங்க?” கேட்டவர் பெரிய தொழிலதிபர் மாணிக்கம்.

“வீட்லதான் சார்”

“நான் உங்க ஆபீஸ் வாசலில்தான் வெயிட் பண்றேன். சீக்கிரம் வாங்க.
உங்ககிட்டே ஒரு முக்கியமான
வேலையை ஒப்படைக்கணும்.
அதுக்கு அட்வான்ஸா அம்பதாயிரம் ரூபாயை இப்ப வந்து வாங்கிக்கங்க.”

“இதோ வர்றேன் சார்.”

‘அடடா.. நாம பணக்கஷ்டத்தில்
இருக்கோம்னு கடவுள் நமக்காக
ஒரு ஆளை உதவி செய்ய
அனுப்பியிருக்கார்’ என்று நினைத்தபடி வண்டியை எடுத்தான் சிவா.

வரும் வழியில் ஓரிடத்தில்
கசகசவென்று கூட்டம். சிவா தன் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு எட்டிப்பார்த்தான்.

அங்கே பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பையன் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தான்.

“ஏங்க பையன் யாரு? என்னாச்சு?”

“தெரியல. லாரிக்காரன்
இடிச்சுட்டு போயிட்டான்”

“108-க்கு போன் பண்ணியாச்சா?”

“அரை மணி நேரமாச்சு. இன்னும் வரல”

‘பேசாம நாமளே கொண்டு போய் ஹாஸ்பிடல்ல சேர்த்துடுவோமா?,
அய்யய்யோ அங்கே சார் வேற வெயிட் பண்ணிக்கு இருக்காரே. அவர்
கொடுக்கறதா சொன்ன பணத்தை வச்சுத்தான் இன்னைக்கு சில
கமிட்மென்ட்டை செட்டில்
பண்ணலாம்னு நினைச்சேன்'
இப்படி பல யோசனைக்கு பின்
ஒரு முடிவுக்கு வந்தான் சிவா.

ஒரு ஆட்டோவை நிறுத்தியவன் யார் உதவிக்கும் காத்திராமல் அந்த பையனை தூக்கி ஆட்டோவில் கிடத்தி ஹாஸ்பிடலுக்கு கொண்டு போய் சேர்த்தான். அப்போது சிவாவின் போன் அலறியது.

மாணிக்கம்தான் அழைத்தார்.
“ஹலோ சிவா. இன்னும் வரலையா?”

“சாரி சார். வரும் வழியில்
ஒரு ஆக்ஸிடென்ட். ஒரு பையன்
அடிபட்டு கிடந்தான்.
அவனை அப்படியே போட்டுட்டு வர
மனசு வரல. அதான் மருத்துவமனைக்கு கொண்டுவந்தேன்.”

“முட்டாள் மாதிரி பேசாதீங்க.
எனக்கு எவ்வளவு வேலை இருக்கு தெரியுமா? அதையெல்லாம்
விட்டுட்டு உங்களுக்காக
இங்கே காத்திட்டு இருக்கேன். நீங்க
என்னடான்னா சமூக சேவை செஞ்சிட்டு இருக்கீங்க. உங்க
ஆர்டரே வேண்டாம். கேன்சல்
பண்ணிக்குவோம். நான் கிளம்பறேன்”

“சார் ஒரு நிமிஷம்” என்று பரிதாபமாக
சொன்னவனை கண்டுக்காமல்
எதிர்முனை பட்டென்று கட் ஆனது.

மருத்துவமனையில்
பார்மாலிட்டியை முடித்ததும் வீட்டுக்கு கிளம்பினான்.

வேலை ஓடவில்லை. அடிபட்ட பையன்
நிலைமை எப்படி இருக்கோ என்று நினைத்தவன் திரும்பவும்
மருத்துவமனைக்கு போனான்.

அங்கு மாணிக்கம் நின்றார். அங்கிருந்த
வார்டு பாய் மாணிக்கத்திடம்
சிவாவை கைகாட்டி, “சார். காலைல உங்க பையனை இங்கே கொண்டு வந்து சேர்த்தது இவருதான் சார்.” என்றார்.

மாணிக்கம் கண்கள் கலங்கியபடி சிவாவின் கையை பிடித்தார். “ரொம்ப
நன்றி சிவா. நீங்க காப்பாத்துனது என்
பையனைத்தான். நான்
அப்படி பேசியது தவறுதான்.
என்னை மன்னிச்சுக்கங்க. இந்தாங்க
அம்பதாயிரம் ரூபாய். வச்சுக்கங்க. இந்த பணம் வேலைக்கு அட்வான்ஸ் இல்லை. என் பையனை காப்பாத்தினதுக்கு.”

“மன்னிக்கணும். நான் மனிதாபிமான
அடிப்படையில்தான் இந்த
உதவியை செய்தேன்.
பணத்தை எதிர்பார்த்து அல்ல.”

“அப்படின்னா வேலைக்கு அட்வான்ஸா வச்சுக்கங்க.”

“இல்லே சார். உங்க மகன்னு தெரிஞ்சதால நீங்க இப்படி பேசுறீங்க.
வேறு ஆளா இருந்திருந்தா எனக்கு இந்த வேலையை கொடுத்திருக்க மாட்டீங்க.
என் நியாயத்தையும் காது கொடுத்து கேட்டிருக்க மாட்டீங்க...ஆனால் நான் உங்க பையனை யார்னே தெரியாமத்தான் இங்கே கொண்டு வந்து சேர்த்தேன். என்னை பொறுத்தவரைக்கும் மனித உயிரைவிட பணம் முக்கியமில்லை. இப்ப நீங்க கொடுக்கற இந்த வேலையே உங்க
பையனை காப்பாத்தியதால்தானே தவிர, என் மனிதாபிமானத்துக்காக இல்ல... அதனால இந்த வேலையை நான் செய்யறதா இல்லை.

என்னால உங்க அரை மணி நேரத்தை திருப்பி கொடுக்க முடியாதுதான். ஆனால் உங்க அரை மணி நேரம் எந்த உயிரையும் திரும்ப கொண்டுவந்திடாது”

சொல்லிவிட்டு திருப்தியுடன்
நடந்தான் சிவா.

வாதத்தை குறைக்கும் வாதநாராயணன்

வாதநாராயணன் மரம்

தமிழ் மன்னன் ராஜேந்திரன்!


வாழைப்பழத்தின் மகிமை

அன்பு குழந்தையே...

செலவே இல்லாமல் எல்லா நோய்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் மருந்து ஒன்றினை பார்ப்போமா?



Wednesday, November 6, 2019

அமுக்கரா – மருத்துவ பயன்கள்




உங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா?

அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!

உடனே மனது ஏற்காது. ஆனால் உன்மை.

நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை.

போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை

ஆகவே சிக்கனமாக
இருக்காதீர்கள்.

செலவு செய்ய வேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்.

உங்களால் முடிந்த தான தர்மங்களை யோசிக்காமல் செய்யுங்கள்!

எதற்கும் கவலைப் படாதீர்கள். நீங்கள் கவலைப் படுவதால் எதையும் நிறுத்த முடியுமா? வருவது வந்தே தீரும்!

நாம் இறந்த பிறகு, நமது
உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப் படாதீர்கள். அந்த நிலையில், மற்றவர்களுடைய பாராட்டுக்களோ அல்லது விமர்சனங்களோ
உங்களுக்குத் தெரியப் போவதில்லை.

நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்தவை அனைத்தும், உங்கள் வாழ்க்கையோடு சேர்த்து முடிவிற்கு வந்துவிடும்.

உங்களைக் கேட்காமலேயே அவைகள் முடிக்கப்பட்டுவிடும்.

உங்களின் குழந்தைகளைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். அவர்களின்
வாழ்க்கை அவர்களுக்கு விதித்த விதிப்படிதான் அமையும்.

அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை!

சம்பாதிக்கிறேன் என்று பணத்தைத் தேடி அலையாதீர்கள். பங்குச் சந்தைகள் பக்கம் தலை வைத்துப் படுக்காதீர்கள்.
பணத்தைவிட உங்களின் ஆரோக்கியம் முக்கியம்.

பணம் ஆரோக்கியத்தை மீட்டுத் தராது!

ஆயிரம் ஏக்கர் விளைநிலம் இருந்தாலும், நாளொன்றிற்கு
அரை கிலோ அரிசிக்கு மேல் உங்களால் உண்ண முடியாது.

அரண்மனையே என்றாலும் கண்ணை மூடி நிம்மதியாகத் தூங்க எட்டுக்கு எட்டு இடமே
போதும். ஆகவே ஓரளவு இருந்தால், இருப்பது போதுமென்று நிம்மதியாக இருங்கள்!

ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சினைகள் இருக்கும். பிரச்சினை இல்லாத மனிதனைக் காட்டுங்கள் பார்க்கலாம்?
ஆகவே உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.

பணம், புகழ்,
சமூக அந்தஸ்து என்று மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும்
இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள்!

யாரும் மாற மாட்டார்கள். யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள்.
அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும்.

நீங்கள் உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி,
அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்.


Tuesday, November 5, 2019

பணம் என்பது வெறும் காகிதம்

பூர்வ ஜன்ம பாபவிமோசன தலம் திருகூடலூர் ஆடுதுறை பெருமாள் கோயில்


மருத்துவமும் பெண் திருமணமும் !

யாரிடம் பாடம் கற்பது?


நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை யாரிடம் பாடம் கற்பது என்ற கதையின் அறிந்து கொள்ளலாம். வாருங்கள் கதையைப் பற்றிப் பார்ப்போம்.

கருப்பூர் என்ற ஒரு ஊரில் பச்சையப்பன் என்பவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு கடவுள் பக்தி அதிகம். மேலும் அவர் கடுமையான உழைப்பாளியும் கூட. அடிக்கடி கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்வார்.
ஒருநாள் அவர் மஞ்சளுர் செல்ல வேண்டியிருந்தது. காட்டுப் பகுதியைத் தாண்டியே மஞ்சளுருக்கு செல்ல வேண்டும். எனவே அதிகாலையில் எழுந்து மஞ்சளுரை நோக்கிப் பயணமானார்.
அப்போது அவர் மரத்திற்கு கீழே நரி ஒன்று அமர்ந்திருந்ததைப் பார்த்தார். அந்த நரிக்கு முன்னங்கால்கள் இரண்டும் இல்லை. ஏதோ விலங்கிடம் போரிட்டபோது அது தன்னுடைய முன்னங்கால்களை இழந்திருந்தது.
அப்போது திடீரென அவருக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. அதாவது “இந்த நரிக்கு இரண்டு கால்கள் இல்லை. அப்படினா எப்படி இது தனக்கான இரையை வேட்டையாடி உண்ணும்” என்பதுதான் அது.
இவ்வாறு அவர் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் அந்தப் பக்கமாக புலி ஒன்று வந்தது. புலியைக் கண்டதும் புதருக்கு அருகில் பச்சையப்பன் ஒளிந்து கொண்டார்.
புலி ஒரு பெரிய மானை அடித்து இழுத்துக் கொண்டு வந்து அதனைச் சாப்பிட்டது. சாப்பிட்டது போக மீதியை அப்படியே விட்டுவிட்டுச் சென்றது. புலி விட்டுச் சென்ற மீதியை நரி மெதுவாக நகர்ந்து வந்து சாப்பிட்டது.
இதனைக் கண்டதும் பச்சையப்பன் “கால் இல்லாத நரிக்கே இறைவன் உணவினை அளிக்கும்போது பக்திமானான தனக்கு இறைவன் கண்டிப்பாக உணவளிப்பார். நாம் எதற்கு கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும்?” என்று எண்ணினார்.
இந்நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் உழைக்கவே இல்லை. கோவிலுக்குச் சென்று மூலையில் அமர்ந்து கடவுள் நமக்கு உணவளிப்பார் என்ற நம்பிக்கையில் இருந்தார்.
நாட்கள் நகர்ந்தன. அவர் மிகவும் இளைத்து துரும்பானார். உணவு மட்டும் கிடைக்கவே இல்லை.
ஒருநாள் கடவுளிடம் “இறைவா, என்னுடைய பக்தியில் உனக்கு நம்பிக்கை இல்லையா. நான் இப்படியே பட்டினி கிடந்து சாக வேண்டியது தானா? எனக்கு உணவு அளிக்க மாட்டாயா?
“காட்டுல புலி மூலமாக நரி உணவு கிடைக்கச் செய்தியே. அதனைப் பார்த்துட்டு தானே நான் இங்கு வந்தேன். என்னை இப்படி தவிக்க விட்டுட்டியே. இது நியாயமா?” என்று இறைந்து வேண்டினார்.
அப்போது கடவுள் அவர் முன் தோன்றினார். அவரிடம்
“பச்சையப்பா, உனக்கு யாரிடம் பாடம் கற்பது என்று தெரியவில்லை. நீ கற்று கொள்ள வேண்டியது நரியிடம் இருந்து இல்லை. புலியிடம் இருந்து.
நீ புலி போல் உழைத்து உன்னுடைய தேவைக்குப் போக மீதியை ஏழைக்களுக்கு தானமாகக் கொடு.” என்றார்.

Monday, November 4, 2019

ஒற்றுமையே பலம்....



விறகு சொன்ன பாடம்


ஒற்றுமையே பலம் என்பதை விளக்கும் கதை இது (விறகு சொன்ன பாடம்).  ஒற்றுமை என்றைக்கும் வலிமை வாய்ந்தது. அனைவரும் ஒன்றுபட்டால் கிடைக்கும் நன்மைகள் பல. இனி கதை பற்றிப் பார்ப்போம்.
மஞ்சளுர் என்ற ஊரில் பெரியவர் ஒருவர் வசித்து வந்தார். அவருக்கு நான்கு ஆண் பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் எப்போதும் ஒருவருடன் ஒருவர் சண்டை இட்டுக் கொண்டே இருந்தனர்.
பிள்ளைகளின் செயல்பாடுகளைக் கண்ட பெரியவர் மிகவும் மனவருத்தத்திற்கு உள்ளனார்.
எப்படியாவது பிள்ளைகளிடையே ஒற்றுமையை உருவாக்க எண்ணினார். அவருடைய மனதில் திட்டம் ஒன்று உருவானது.
அத்திட்டத்தை செயல்படுத்த எண்ணிய அவர் விறகு கட்டு ஒன்றை எடுத்து வீட்டின் முற்றத்தில் வைத்தார்.
தன்னுடைய பிள்ளைகளை எல்லோரையும் முற்றத்திற்கு அழைத்தார்.
முதலாவது மகனை அழைத்து விறகு கட்டை உடைக்கச் சொன்னார்.அவனும் விறகுக் கட்டை உடைக்க முயற்சித்தான். ஆனால் அவனால் விறகுக் கட்டை உடைக்க முடியவில்லை.
பின்னர் இரண்டாமவனை அழைத்து விறகுக் கட்டை உடைக்கச் சொன்னார். அவனாலும் உடைக்க முடியவில்லை.
இவ்வாறாக மூன்றாமவனும், நான்காமவனும் விறகுக் கட்டை உடைக்க முடியாமல் திணறினர்.
பெரியவர் முதலாமவனிடம் விறகுக் கட்டை பிரித்து ஒரு விறகினை எடுத்து உடைக்கச் சொன்னார்.
முதலாமவனும் தந்தை சொல்லியவாறே விறகுக் கட்டினைப் பிரித்து ஒரு விறகினை எடுத்து எளிதாக உடைத்தான்.
இவ்வாறாக இரண்டாமவன், மூன்றாமவன், நான்காமவனும் விறகுக் கட்டிலிருந்து ஒரு விறகினைத் தனியே எடுத்து எளிதாக உடைத்தனர்.
பெரியவர் தன் பிள்ளைகளிடம் “பார்த்தீர்களா விறகுக் கட்டில் விறகுகள் மொத்தமாக இருந்ததால் அவற்றை உங்களால் உடைக்க இயலவில்லை.
அதே நேரத்தில் விறகுக் கட்டிலிருந்து பிரித்து தனியே எடுத்த விறகினை நீங்கள் எளிதாக உடைத்து விட்டீர்கள். ஒற்றுமையின் பலத்தினை இப்போதாவது உணர்ந்து கொள்ளுங்கள்.
நாம் ஒற்றுமையாக இருக்கும் வரை எதிரியால் நம்மை ஒன்றும் செய்ய இயலாது. நாம் சண்டையிட்டு தனித்தனியே பிரியும் போது எதிரிகள் நம்மை எளிதில் வீழ்த்துவர்.
ஆதலால் நீங்கள் உங்களுக்குள் சண்டை இட்டுக் கொள்வதை விட்டு விட்டு ஒற்றுமையுடன் வாழுங்கள். வாழ்வில் வெற்றி பெறுங்கள்.” என்று கூறினார்.
ஒற்றுமையின் சக்தியை விறகு சொன்ன பாடம் கதையிலிருந்து தெரிந்து கொண்டீர்கள் தானே.
ஆதலால் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற பழமொழிக்கு ஏற்ப எப்போதும் ஒற்றுமையுடன் திகழுங்கள். வாழ்வில் முன்னேறுங்கள்.

புளியின்_மகத்துவம்..!

"பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு "

#ஒரு_காபியின்_கதை..!

நீங்கள் அதிர்ஷடசாலி தான்..!!!


வீட்டில் விளக்கேற்றியவுடன் செய்ய கூடாதவை......

வீட்டில் விளக்கேற்றியவுடன் செய்ய கூடாதவை.: