உடல் நலம் : பக்தர் மனது அறியும் பாபா மொழிகள் !

Thursday, October 31, 2019

பக்தர் மனது அறியும் பாபா மொழிகள் !

அன்பு குழந்தையே...




இன்னும் எத்தனை நாள் இழந்து போன விஷயங்களையும் உறவுகளையும் நினைத்து வருத்த படபோகிறாய். அவர்கள் உன் அன்பை சிறிதும் உணராத மனம் படைத்தவர்கள் என்று நீ அறிவாய் அல்லவா.

அதை உணர்நது தெரிந்த பிறகும் அவர்களுக்காக இன்னும் உன் நிமிடங்களை  செலவழித்து, உன் வாழ்க்கையின் சந்தோஷத்தையும் நிம்மதியையும் இழக்காதே

உன் மனம் ரணத்தால் கொதித்து போய் இருக்கிறது, ஆதங்கத்திலும் வலியிலும் நீ இருக்கிறாய். நமக்கு என்று ஓரு நாள் வரும், அன்றைக்கு பேசலாம் என்று வேதனையில் இருக்கிறாய்.

நீ பேசி என்ன பயன்? அவர்கள் அப்படி தான் திருந்தாத மனிதர்கள். அவர்களை நினைத்து பேசினால் நீ தான் நிம்மதி இழப்பாய். அதை ஞாபகம் வைத்துக் கொள்.

உன்னையும் உன் அன்பையும்  கொண்டாடு பவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக நீ சிரி, அழு வருத்தப்படு,  உதவி செய். ஆனால் உன்னை மதிக்காத இடத்தில் ஓருநிமிடம் கூட தங்காதே.

அமைதியாக அவர்களை விட்டு நகன்று வந்து விடு. அவர்களை பற்றி யோசிக்காதே, உன் கோபம் நியாமானது தான் ஆனால் அது வேண்டாம். அது உன் நிம்மதி சிரிப்பு சந்தோஷத்தையும் தொலைத்து விடும்.

உனக்கு எந்த விதமான குழம்பும்  நிலை வேண்டாம். இனிமேல் எல்லாம் நல்ல காலம் தான். உன்னை நான் உயர்த்தி பிறர் நிமிர்ந்து பார்க்கும் வண்ணம் உன் வாழ்க்கையை  வாழ வைப்பேன்.

ஓம் ஸ்ரீ சாய் ராம்....

No comments:

Post a Comment