உடல் நலம் : படித்ததில் பிடித்தது...

Friday, October 18, 2019

படித்ததில் பிடித்தது...

👍இரண்டாம் வகுப்பு ஆசிரியை வாய்ப்பாடு ஒன்றை கரும்பலகையில் எழுதினார்.*


*இந்த வாய்ப்பாடு எழுத ஆரம்பித்தது முதல்....,*
*வகுப்பறை முழுவதும் சிரிப்பொலி தொடர்ந்தது.*

காரணம்,
*முதலாவது வாய்ப்பாடு பிழையாக எழுதப்பட்டிருந்தது*

1×9=7, ❌

2×9=18, ✔
3×9=27, ✔
4×9=36, ✔

5×9=45, ✔
6×9=54 ✔
7×9=63 ✔

8×9=72 ✔
9×9=81 ✔
10×9=90 ✔

*மாணவர்களைச் சிரிக்கத் தூண்டியது.*
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

*சமன்பாட்டை எழுதி முடித்து மாணவர்களை நோக்கிய ஆசிரியை.....,*

*சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு பேசத் துவங்கினார்...*

*நான் முதல் வாய்ப்பாட்டை பிழையாக எழுதியிருக்கின்றேன்.*

*இதன் மூலம் உங்களுக்கொரு உண்மையை புரியவைக்கப் போகிறேன்.*
🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶

*இந்த உலகம் உங்களை எப்படி விமர்சிக்கும் என்பதை நீங்கள் இதன் மூலம் புரிந்து கொள்வீர்கள்.*

*நான் இங்கு 9 முறைகள் மிகச் சரியாக எழுதியிருக்கின்றேன்.*

*அதற்காக நீங்கள் யாரும் என்னைப் பாராட்டவில்லை.*

ஆனால்,
*நான் பிழையாக எழுதிய ஒரே ஒரு விஷயத்தைக் மட்டும் கவனித்து.......*

*அனைவரும் சிரித்து கேலி செய்கிறீர்கள்.*
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷

*⚀நீங்கள் இலட்சம் தடவைகள் விஷயங்களைச் சரியாக செய்த போதிலும்......,*

*⚀இந்த உலகம் உங்களை ஒரு போதும் பாராட்டப் போவதில்லை.*

*⚀ஆனால் நீங்கள் செய்த ஒரு பிழையைத் தான் உலகம கவனிக்கும்.*
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸

*⚅அதையே மிகக் கீழ்த்தரமாக விமர்சிக்கும்...*

*⚅இவைகளைக் கண்டு ஒரு போதும் தளர்ந்து விடாதீர்கள்.*

*⚅உங்களைப் பார்த்து சிரித்தவர்கள்,*

*⚅உங்களை விமர்சித்தவர்கள் முன்னால் .....,*

*⚅உயர்ந்து நிற்கும் முயற்சியில் உறுதியாக நில்லுங்கள்.*
💠💠💠💠💠💠💠💠💠

No comments:

Post a Comment