உடல் நலம் : தமிழகத்தில் 30 லட்சம் குழந்தைகள் ஆட்டிசம் நோயாளிகள்.

Tuesday, October 22, 2019

தமிழகத்தில் 30 லட்சம் குழந்தைகள் ஆட்டிசம் நோயாளிகள்.




அடுத்த மருத்துவ மார்க்கெட், நம் குழந்தைகள்தான். ஆட்டிசம் என்பது  அளந்துவைத்த பெயர். ஆட்டிசம் மட்டுமல்ல, மூளை வளர்ச்சி குறைபாட்டுடன், உடல் வளர்ச்சி சிதைவுடன் பிறக்கப்போகும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இதற்கெல்லாம் என்ன காரணம்!?

இதற்குக் காரணம் தடுப்பூசிதான் என்று நாங்கள் ஏன் சொல்ல வேண்டும்? நாங்கள் ஏன் தடுப்பூசி வேண்டாம் என்று சொல்லப்போகிறோம்? தடுப்பூசி நல்லதா கெட்டதா என்று ஆராய்ச்சி செய்வதா எங்கள் வேலை? தடுப்பூசி வேண்டாம் என்று சொன்னது யார்? தடுப்பூசி ஆபத்தானது என்று சொன்னது யார்?

தடுப்பூசியைக் கண்டுபிடித்த சாபின் சொன்னார், தடுப்பூசி தேவையற்றது என்று!

தலைசிறந்த விஞ்ஞானிகள், மருத்துவர்கள் என்று அரசாங்கத்தால் அடையாளப்படுத்தப்பட்ட 11 பேர் சொன்னார்கள், தடுப்பூசி ஆபத்தானது என்று!

இந்தியத் தடுப்பூசிச் செயல்திட்டத்தின் தலைவராக இருந்த மருத்துவர் ஜேக்கப் புலியேல் சொன்னார், தடுப்பூசி தேவையில்லை என்று.

அனைத்துக்கும் நாம் அண்ணாந்து பார்க்கும் அமெரிக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டது, தடுப்பூசிகளால் ஆபத்து என்று.

அது மட்டுமல்ல, எதற்கெடுத்தாலும் ஆதாரம், நிரூபணம் என்று கூவிக்கொண்டிருக்கும் இந்த அறிவாளி சமூகம் முன்வைக்கும் இந்தத் தடுப்பூசி திட்டம் நிரூபணம் செய்யப்படாத ஒரு தியரிதான்!

ஆம், அந்த தியரியைப் பற்றித் தெரிந்துகொண்டால் இவர்கள் எவ்வளவு பச்சையாகப் பொய் சொல்கிறார்கள் என்பது நமக்கு தெரியும்.

தடுப்பூசி என்று நம் உடலினுள் செலுத்தப்படுவது மருந்தல்ல, செயற்கையாக உற்பத்திசெய்யப்பட்ட கிருமி. எந்தக் கிருமியை நம் உடல் எதிர்க்க வேண்டுமோ, அந்தக் கிருமியைச் செயற்கையாகத் தயாரித்து, உயிருடனோ, செயலிழக்கச் செய்தோ (கிருமிகளின் தன்மையைப் பொறுத்து) உடலினுள் செலுத்துவார்கள். அப்படிச் செலுத்தப்படும்போது நமது உடலின் நோய் எதிர்ப்புசக்தி, அந்தக் கிருமியைக் கொன்றுவிடும். அப்போதும் நம் உடல்தான் வேலை செய்கிறது. அப்படி அந்தக் கிருமியைக் கொன்று பழகிய உடலின் நோய் எதிர்ப்புசக்தியானது, அடுத்த முறை அந்தக் கிருமி தாக்க வந்தால் அதிக வீரியத்துடன் செயல்பட்டு நோய் வராமல் தடுக்கும் என்பது அவர்களின் தியரி. ஆம் Vaccination என்பது வெறும் தியரி. அதுவும் நிலையற்ற தியரி (Unstable theory). அதாவது, சரி அல்லது தவறு என்று எப்படி வேண்டுமானாலும் நிரூபணம் செய்யக்கூடிய தியரி.தடுப்பூசிகளுக்கு ஆதரவாக, ஆயிரம் சான்றுகளை முன்வைக்கும் அறிவாளி வர்க்கம், Vaccination (தயாரிக்கப்பட்ட தடுப்பூசி) என்பதற்கும் Immunisation (உடலின் நோய் தடுப்பு ஏற்பாடு) என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை மூடி மறைத்தவாறு விவாதம் செய்கிறது.

Vaccination என்றால் ஊசிகளின் மூலம் கிருமிகளைச் செலுத்தி நோய் எதிர்ப்பு ஆற்றலைத் தூண்டுவது. Immunisation என்றால் இயற்கையாக ஒவ்வொரு மனிதருக்கும் விலங்குகளுக்குள்ளும் இருக்கும் நோய்த் தடுப்பு ஆற்றல் செயல்பாடு. Immunisation தான் (உடலின் நோய் தடுப்பு செயல்பாடு) நிரூபணம். Vaccination (தடுப்பூசி) என்பது, முழுமையாக நிரூபிக்கப்படாத, நிலையற்ற கோட்பாடு. இதையும் நாங்கள் சொல்லவில்லை. உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. மேலும் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அனைத்து ஆவணங்களிலும் 'Immunisation' மூலமாகத்தான் நோய்கள் தடுக்கப்பட்டிருக்கின்றன என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். Vaccination மூலமாக என்று சொல்லவில்லை. அவ்வளவு தெளிவானவர்களாம்.

இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் தடுப்பூசி குறித்துப் பேசும் மருத்துவர்கள் இந்த வேறுபாட்டினை மக்களுக்குச் சொல்வதில்லை. இவை இரண்டையும் தொடர்புபடுத்திச் சொல்லும்போது, 'Vaccination is a part of Immunisation' என்கிறார்கள். அதாவது தடுப்பூசி மூலமாகக் கிருமிகளைச் செலுத்தி உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலைத் தூண்டுவதும் ஒரு வகை நோய் தடுப்புச் செயல்பாடுதான் என்று சொல்கிறார்கள்.

உங்கள் வழியிலேயே வருகிறோம். நீங்கள் சொல்வதன்படி பார்த்தால், வேப்பங்குச்சியால் பல் விளக்குவதும் Immunisation தான். களிமண்ணில், சேற்றில், தரையில் விளையாடுவதும் Immunisation தான். விறகடுப்பில் சமைப்பதும் immunisation தான். ஆற்று நீர், ஊற்று நீர் என்று குடித்து ஓடி ஆடித் திரிவதும் Immunisation தான்.

தடுப்பூசி மூலம் குறிப்பிட்ட ஏதாவது ஒரு நோய்க்கு மட்டும்தான் எதிர்ப்பாற்றலை உருவாக்க முடியும் (Particular immunisation). ஆனால், நாம் மரபு வழியில் செய்துவந்த ஒவ்வொரு செயலும் கோடானுகோடி கிருமிகளுக்கு (Common immunisation) எதிரான தடுப்பாற்றலை உருவாக்க வல்லது. இது எந்த மருத்துவருக்கும் தெரியாதா? இதை ஏன் அவர்கள் சொல்லித் தருவதில்லை!? அவர்களின் குழந்தைகளுக்கும் சேர்த்துதான் பேசுகிறோம்.ஒரு கிருமி நம் உடலுக்குள் செல்ல வேண்டுமானால் தோல், வாய், மூக்கு மற்றும் நாசிகளில் உள்ள தடுப்பு திரவங்களைத் தாண்டி உள்ளே நுழைய வேண்டும். அப்படி நுழைந்தாலும் வயிற்றில் இருக்கும் HCL அமிலமும், நுரையீரல், கல்லீரல் போன்ற உறுப்புகளில் இருக்கும் என்சைம்கள் ஆகியவற்றைத் தாண்டித்தான் ரத்தத்தினுள் நுழைய வேண்டும். பிறகுதான் நோய் எதிர்ப்பாற்றலுக்கான வேலை. ஆனால், இந்த தடுப்பூசிகளின் வழியாக, கிருமிகள் நேரடியாக ரத்தத்தினுள் செலுத்தப்படுகின்றன.

இயற்கையாக படைக்கப்பட்ட நுண்ணுயிரிகளையும், உணவுக் கூறுகளையும் மட்டுமே உடலால் ஜீரணம் செய்ய முடியும் என்பது அறிவியலால் நிரூபிக்கப்பட்ட உண்மை. இவற்றில் சிறிது மாற்றம் செய்தால்கூட அவற்றை உடைப்பதற்கும் ஜீரணம் செய்வதற்கும் உடல் சிரமப்படும். அப்படியிருக்க, செயற்கையாகத் தயாரிக்கப்பட்டு, தடுப்பூசிகள் மூலமாக உடலினுள் செலுத்தப்படும் இந்த நுண்ணுயிரிகளை உடலினால் ஜீரணம் செய்யவே முடியாது. கழிவுகளாக மட்டுமே வெளியே அனுப்ப முடியும். அப்படி அனுப்ப முடியவில்லை என்றால் அது ரத்தத்தில் தங்கி மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

உலக நாடுகளின் உயர்கல்விக்கான பேராசிரியராகச் சுற்றி வரும், மதிக்கத்தக்க மருத்துவர் பி.எம்.ஹெக்டே இதை ஒப்புக்கொண்டார், “ஒவ்வொரு மருந்தும் ஒரு நோயைக் குணப்படுத்துவதில்லை. மாறாக, ஒவ்வொரு மருந்தும் வேறொரு நோய் தரும்” என்று.

மேலும் இந்தத் தடுப்பூசிகள் செய்த சாதனைகளாக அவர்கள் குறிப்பிடுவது, ஒரு குறிப்பிட்ட நோயை முற்றிலும் அழித்துவிட்டோம் என்பது. ஒரு நோய் வேகமாகப் பரவுகிறது என்றால், அதற்கு அந்த நோய் பரவும் சூழல்தான் பிரதான காரணம். அந்தச் சூழலை மாற்றிவிட்டால் அல்லது அந்த நோய் பரவுவதற்கு காரணமான மூலத்தை (Source) அழித்துவிட்டால், அந்தக் குறிப்பிட்ட நோயை கட்டுப்படுத்திவிடலாம். தடுப்பூசியால்தான் நோய் அழிக்கப்பட்டது என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. இதுகூட நாங்கள் சொன்னதல்ல. தமிழக அளவில் இந்தத் தடுப்பூசித் திட்டத்தின் செயல் தலைவராக இருக்கும் மருத்துவர் குழந்தைசாமி ஒரு நேர்காணலின்போது சொன்னார்.

தடுப்பூசிக்கும் ஆட்டிசத்துக்கும் சம்மந்தமில்லை என்று தலையில் அடித்து சத்தியம் செய்கிறார்கள். பிறகு எதற்காக உலகத்தின் தலைவனாகத் தனக்கு மகுடம் சூட்டிக்கொள்ளும் ஒரு நாட்டின் நீதிமன்றம், தடுப்பூசியினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும்? அதுவும் ஆட்டிசத்துக்குத் தனிப் பிரிவு வைத்து இழப்பீடு வழங்க வேண்டும்? சரி, அப்படித் தடுப்பூசிக்கும் ஆட்டிசத்துக்கும் சம்மந்தமே இல்லை என்றால், ஆட்டிசம் என்னும் குறைபாடு இவ்வளவு வேகமாகவும் அதிகமாகவும் பரவுவதற்கு காரணம் என்னவென்று சொல்லுங்கள்!

இந்தியாவில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை கோடிகளைக் கடந்துவிட்டது. தமிழகத்தில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம் இருப்பதாக அதிகாரபூர்வ அறிக்கையும் வெளிவந்துவிட்டது! ஆட்டிசம் மற்றும் குழந்தை வளர்ச்சி குறைபாடு ஆகியவை வேகமாக பெருகிவருவதை ஒப்புக்கொண்டார்கள்.

அவர்களுடன் சண்டையிட நமக்கு நேரமில்லை. அவர்களிடம் நிரூபிக்க வேண்டும் என்ற தேவையும் நமக்கில்லை. தடுப்பூசிகள் இல்லாமல்தான் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நாம் ஆரோக்கியமாக வாழ்ந்தோம் என்பதே மிகப்பெரிய நிரூபணம்தான்!

நமக்கு, நம் குழந்தைகள்தான் முக்கியம்.

நம் குழந்தைகளை நாம்தான் காப்பாற்ற வேண்டும். தடுப்பூசியைத் தடுக்கும் உரிமையை நமக்கு நம் சட்டம் கொடுத்துள்ளது. நாம், நம் குழந்தைகளைக் காப்பாற்றிக்கொள்ளலாம். அவர்களின் குழந்தைகளுக்கும் சேர்த்து பேராற்றலிடம் வேண்டிக்கொள்ளலாம்!


No comments:

Post a Comment