உடல் நலம் : October 2019

Thursday, October 31, 2019

அகோபிலம் என்ற திவ்ய தேசம்......

#அகோபிலம்


நரசிம்மர்

ஏன்? ஏன்? ஏன்?

பக்தர் மனது அறியும் பாபா மொழிகள் !

அன்பு குழந்தையே...


உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியையும் கொடுக்கும் உன்னதமான கஞ்சி

இன்றைய காய்கறி மருத்துவ சிந்தனை

30 நிமிட நடை பயிற்சியின் நன்மைகள்

கணவனை சந்தோசப் படுத்துவது எப்படி ?

யார் சிறந்தவர் என்று சொல்லுங்கள்


யார் சிறந்தவர் என்று எனக்குப் பதில் சொல்லுங்கள் என்றார் பேராசிரியர். 

அது ஒரு கல்லூரி வகுப்பறை. அங்கு பேராசிரியர் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
அப்போதுதான் அவர் தனது மாணவர்களிடம் “என் அருமை மாணவர்களே. உங்களால் நான் கூறும் 3 நபர்களில் யார் சிறந்தவர் என்று கூற முடியுமா?” என்று கேட்டார்.அதற்கு மாணவர்கள் “சரி கூறுகிறோம்” என்றனர்.

மருந்தில்லா மருத்துவம்..



#விழிப்புணர்வுபதிவு...

ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம், தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் #நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்!

மருதாணி – மருத்துவ பயன்கள்


Tuesday, October 29, 2019

அமானுஷ்ய சக்திகள் கொண்ட ஆகாச கருடன் கிழங்கு.!

ஆகாச கருடன் கிழங்கு.!இம் மூலிகை காடுகள்,வனங்களில்மலை சார்ந்த பகுதிகளில் தன்னிச்சையாக வளரும் கொடி இனமாகும்.

Sunday, October 27, 2019

மனித உடலில் உள்ள அதிசயக்கத்தக்க விஷயங்கள் யாவை?



உடலிலேயே பெரிய செல் பெண்களின் கருமுட்டை. சிறிய செல் ஆண்களின் விந்தணு.

ஒருவர் வயிறு நிறைய சாப்பிட்ட பின், அவரது கேட்கும் திறன் சற்று குறையும். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்களேன்.

மாலை வேளையை விட, காலையில் அனைவரும் ஒரு செ.மீ உயரமாக இருப்போம்.

பிறக்கும் போது ஆரம்பத்தில் அனைத்துமே கருப்பு மற்றும் வெள்ளையாகத் தான் தெரியும்.

அனைவருக்குமே ஒரு கண் வலிமையாகவும், ஒரு கண் பலவீனமாகவும் இருக்கும்.

நமது உடலில் உள்ள எலும்புகளானது 10 வருடங்களுக்கு ஒருமுறை தானாகவே புதுப்பித்துக் கொள்ளும்.

ஒவ்வொருவருக்கும் விரல் ரேகைகள், நாக்கில் உள்ள ரேகைகள் மற்றும் வாசனை மாறுபடும்.

இரவில் படுக்கும் போது, படுக்கை அறையானது மிகவும் குளிர்ச்சியாக இருந்தால், கெட்ட கனவுகள் வரக்கூடும்.

ஒரு மனித முடியின் வாழ்நாளானது சராசரியாக 3-7 வருடங்கள் ஆகும். அதன் பின் அந்த முடியானது உதிர்ந்து, அவ்விடத்தில் புதிய முடி வளரும்.

மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்றுவிடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானையின் காது அளவிற்கு வளர்ந்திருக்கும்.

ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம். உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே.

பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறை கண்ணை சிமிட்டுகிறோம். இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.

உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள்.

விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை. தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும்போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.

நமது பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும். காரணம் ஒரு சதுர அடியில் வெறும் மூன்றில் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன.

இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.

நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 10 பார் சோப்புகளுக்கு தேவையான கொழுப்பு ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு என பல பொருட்கள் உள்ளன.

மனிதனின் மூளையானது பகல் நேரத்தை விட, இரவில் தான் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். இதற்கான காரணம் இதுவரை சரியாக யாராலும் சொல்ல முடியவில்லை.

உடலில் மற்ற இடங்களை விட, முகத்தில் வரும் முடியின் வளர்ச்சி மிகவும் அதிகமாக இருக்கும்.

மற்ற விரல்களில் வளரும் நகங்களின் வளர்ச்சியை விட, நடுவிரலில் நகத்தின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.

இரைப்பையில் சுரக்கப்படும் அமிலமானது மிகவும் சக்தி வாய்ந்தது. ஆனால் அந்த அமிலத்தால் இரைப்பை அழியாது மாறாக இரைப்பையின் சுவரானது தானாக புதுப்பித்துக் கொள்ளும்.

ஆண்களின் இதயத்துடிப்பை விட பெண்களின் இதயம் வேகமாக துடிக்கும்.

ஆண்களை விட பெண்கள் இரு மடங்கு வேகமாக கண்களை சிமிட்டுவார்கள்.

பெண்களை விட ஆண்களுக்கு தான் விக்கல் அடிக்கடி வரும்.

கால் விரலில் வளரும் நகங்களை விட, 4 மடங்கு அதிகமாக கைவிரலில் நகங்களானது வேகமாக வளரும்.

குழந்தைகள் பிறக்கும் போது, கண்கள் நீல நிறத்தில் இருக்கும். பின் உடலில் மெலனின் உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க கருவிழியானது உண்மையான நிறத்தைப் பெறும்.

குழந்தைகள் பிறக்கும் போது நுரையீரல் பிங்க் நிறத்தில் இருக்கும். சுவாசிக்க, சுவாசிக்க, காற்றில் இருந்து கலந்து வரும் மாசு காரணமாக தான் நுரையீரல் நிறம் கருமையாக மாறிவிடுகிறது.

சராசரியாக ஒரு பெண் அறுபது வயதை எட்டும் போது, 450 குழந்தைகளை பெற்றெடுக்க தேவையான முட்டைகளை வெளியிட்டிருப்பாள்...

மணலிக்கீரையின் மருத்துவ குணங்கள்....

கடுக்காயின் அற்புத மருத்துவ பலன்கள்.....

இத்தனை அற்புத மருத்துவ பலன்களை கொண்டுள்ளாதா கடுக்காய்...?

கை கால் நடுக்கம் நரம்பு தளர்ச்சி நீங்க..



அதிக வேலைப்பளு, மனஉளைச்சல். நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பம் உள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள், நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்படுவார்கள்.

சமையலறையில் விழிப்புணர்வு.......



சமையலறையில் எப்போதும் ஒரு பை கோதுமை மாவு () வைத்திருங்கள், அது எங்குள்ளது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.

ஒரு நிமிடத்திற்கு ஒரு மனிதன்.......

சுபகாரியம் எந்த நட்சத்திரத்தில் செய்யலாம் ?



1, அசுவினி நட்சத்திரத்தில் சூரியனை வணங்கிவிட்டு தன்னை விட உயர்ந்தவர்களை ,உயர் அதிகாரிகளை சந்தித்தால் காரியம் மிகச் சுலபமாக முடியும் .

ஆரோக்யம் கிட்டும் குசா தோப்புக் கரணம்.....

உடலின்_72000நாடிகளையும்_வளப்படுத்தும்

லக்ஷ்மி குபேர பூஜை செய்வதால் ஏற்படும் நன்மைகள் ...

தீபாவளி ஸ்பெஷல் !

தினமும் நெல்லிக்காய் சாறு அருந்துவதால் என்ன பயன் தெரியுமா....?

மழை நீர் நமது உயிர் நீர் ...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

நிறை/குறைகளோடு வாழ்ந்தால் தான் சிறந்த தாம்பத்தியம்

கணவன் மனைவி

புளிச்ச கீரையில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்...!


Sunday, October 20, 2019

"எட்டு" போடுங்கள்- நோய் எட்ட விடாமல் செய்யுங்கள்.



எட்டு என்பது ஒரு நம்பர். ஒன்றிலிருந்து பத்து வரை சொல்லும்போது ஏழு என்ற நம்பருக்கு அடுத்ததாக வருவது தான் "எட்டு". இது குழந்தைகள் நாம் கேட்கும் கேள்விக்கு சொல்லும் பதில்.

நாம் இப்பொழுது பார்க்கப்போவது "எட்டு" போடுவதனால் கிடைக்கும் பலன்களை.

இது என்னய்யா பெரிய விஷயம்?

சர்க்கரை வள்ளி கிழங்கின் மருத்துவ குணங்கள் மற்றும் பலன்கள் !

●ஒரு அருமையான கதை.



ஒரு விழாவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய பழைய ஆசிரியரை சந்திக்கின்றார்.

கரிசலாங்கண்ணியில் இப்படி ஒரு அபார சக்தியா.?

படித்ததில் எனது மனதை தொட்டது ....

Friday, October 18, 2019

படித்ததில் பிடித்தது...

👍இரண்டாம் வகுப்பு ஆசிரியை வாய்ப்பாடு ஒன்றை கரும்பலகையில் எழுதினார்.*

வெந்தய கீரை இந்த கீரையில் உள்ள சத்துக்கள் தெரியுமா. ?

வெந்தய கீரை

மனத்தெளிவு

1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது

2. அனைவரையும் அப்படியே ஏற்றுக்கொள்வது

3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்

4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல்.

5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.

6. செய்யும் காரியத்தை மன அமைதியுடனும், முழுமயுடன் செய்வது

7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது.

8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல்.

9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்.

10. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல்..

11. நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல்.

12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல என்ற நிலையை அடைதல்.

*இந்த 12 ல் அட்லீஸ்ட் ஒரு ஏழெட்டையாவது கடைபிடிக்க முயற்சித்தால் வாழ்க்கை எளிதாகிவிடும்

ஒரு குட்டி கதை:


♥(அனைவரும் கண்டிப்பாக படிக்கவும்)படித்ததில் பிடித்தது



♥35 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 50க்கும் மேற்பட்ட ஆண்மகன்கள் உள்ளார்கள்

♥30 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் 50க்கும் மேற்பட்ட பெண்களும் உள்ளனர்.

♥இதற்கு சொத்து மதிப்பும் வரட்டு கௌரவமுமே காரணம். அதாவது மாப்பிள்ளைக்கு அடிப்படை சொத்து, விவசாய தோட்டம் 7 ஏக்கருக்கு மேல் இருக்க வேண்டும். அல்லது வெளிநாட்டு மாப்பிள்ளை

♥அவரே Post graduate degree முடித்து, இலங்கையில் வங்கி.. ஆசிரியை.. சென்னை, பெங்களூரீல் IT கம்பெனியில் வேலையில் இருக்க வேண்டும் அல்லது வெளிநாட்டில் வேலையில் இருக்க வேண்டும்.

♥குறைந்தது 40,000க்கும் மேல் சம்பளம் வாங்க வேண்டும்.

♥பல இளைஞர்கள் படித்த படிப்பிற்கேற்ற தகுதியான வேலை கிடைக்காததால், சுயதொழில் செய்து வருகின்றனர். சுயதொழில் செய்யும் ஆண்களை திருமணம் செய்துகொள்ள பெண்கள் விரும்புவதில்லை. பெண் வீட்டாரும் விரும்புவதில்லை..

♥வீட்டுக்கு ஒரே பையனா இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும்.
அப்புறம் இதெல்லாம் இருந்தால் தோற்றத்தில் திரைப்பட நடிகர்கள் விஜய்,  அஜித்,  அவர்கள் போல் இருக்க வேண்டும்.

♥1995 வரை திருமணம் செய்தவர்கள் சொத்து, உத்தியோகம், தகுதி பார்த்துதான் திருமணம் செய்வேன் என்று சொல்லி இருந்தால் இந்த தலைமுறையே இருந்து இருக்காது.

♥இதில் இப்போ என்ன பிரச்சனை என்றால் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதால் திருமண வயதை கடந்தும் ஆணும், பெண்ணும் அதிகமாக இருப்பதுதான்.

♥ஒரு கட்டத்தில் ஜாதக பொருத்தமும் திருமண தடங்கலாக இருந்து வருகிறது.
சரி இதன் விளைவு என்ன என்று பார்ப்போம்...

♥1960 முன்பு வரை ஒவ்வொரு கிராமத்திலும் பலருக்கு 10 குழந்தைகள், 8 குழந்தைகள், குறைந்தது 5 குழந்தைகள் சர்வ சாதாரணமாக பெற்றுக்கொண்டார்கள்.

♥1980க்கு பின் 100ல் 80 குடும்பம் இரண்டு குழந்தைகள், எங்காவது ஒரு சில குடும்பத்தில் மூன்று குழந்தைகள் உண்டு.

♥2000க்கு பின் ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைதான் என்பது எழுதப்படாத தீர்ப்பாக மாறிவிட்டது.

♥ஆனால், 2010க்கு பின் ஒரு குழந்தை வேண்டுமே இறைவா என்று போகாத கோவிலும் இல்லை, பார்க்காத மருத்துவமும் இல்லை. என்ற நிலையில் உள்ளோம்.

♥இதற்கு அறிவியல் ஆயிரம் காரணம் சொல்லலாம், ஆனால் முதல் காரணம் ஆரோக்கியம்..

♥1960 வரை பெண்ணுக்கு 16, ஆணுக்கு 20ல் திருமணம் உணவு: ராகி, கம்பு, சோளம்.

♥1975க்கு மேல் பெண்ணுக்கு 18, ஆணுக்கு 22  உணவு: அரிசி .அரிச மா மரவள்ளி

♥1992க்கு மேல் பெண்ணுக்கு 20, ஆணுக்கு 25 உணவு: பட்டை தீட்டப்பட்ட அரிசி.

♥2000க்கு மேல் பெண்ணுக்கு 25, ஆணுக்கு 30க்குள்.. உணவு: துரித உணவு.

♥2010க்கு மேல்
உணவு: மைதா மாவில் தயாரித்த உணவு, வெள்ளை சர்க்கரை பயன்பாடு அதிகம். தரம் குறைந்த எண்ணெய் என மனித இனம் நோய் மற்றும் மலட்டுத்தன்மை தாக்கத்தில் இருக்கிறோம்.

♥இந்நிலையில் 28க்கு மேல் 35 வயது வரையிலும் திருமணம் ஆகாமல் பெண்கள் அதிகளவில் இருக்கிறார்கள்.

♥ஆண்கள் 30 வயது முதல் 40 வயது வரை திருமணம் ஆகாமல் உள்ளார்கள்.

♥வசதிகள் வைத்து திருமணம் முடிக்கப்பட்டால் அது வியாபாரம்.

♥திருமணத்துக்கு முன் ஏழையாக இருந்து, பிற்காலத்தில் பணம் புகழ்பெற்ற மனிதர்கள் ஏராளம். முதலில் சொத்து சுகம் என வாழ்ந்து திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் ஏழ்மைக்கு வந்தவர்கள் அதிகம்.

♥எனவே, வரும்காலம் இப்படிதான் இருக்கும் என்று தீர்மானம் செய்யாமல், நல்லதை மற்றும் நினைத்து மனங்கள் பிடித்தால் மணம் செய்யலாம்.

♥கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். குடும்பம் என்பது எவ்வளவு முக்கியம் அதற்கு பணம் தேவைதான். ஆனால், பணத்தால் வாழ்க்கையை இழந்துவிடக் கூடாது.

♥சரியான கல்வியறிவு, நல்லொழுக்கம், நற்குணம், நல்ல சுறுசுறுப்பு, உழைக்கும் மனப்பான்மை உள்ள மாப்பிள்ளையா, பெண்ணா என கண்டறிந்து மனமுடியுங்கள்... வாழ்க்கை இனிமையாகும்.


Tuesday, October 15, 2019

நம் குழந்தைக்காக நாம் செய்யவேண்டியது ........

கடவுள் தன்மையைக் கொண்ட வெண்கடுகு


எக்கச்சக்க பலன்கள் தரும் நிலவேம்புக் குடிநீர் என்கிற அருமருந்து!

காய்ச்சலுக்கு மட்டுமல்ல... எக்கச்சக்க பலன்கள் தரும் நிலவேம்புக் குடிநீர் என்கிற அருமருந்து!

டீ குடிப்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது !



சுண்டைக்காய் சமாசாரம்.’ அப்படி அலட்சியப்படுத்தக்கூடியதல்ல,...

பைசா பொறாத விஷயங்களை ‘#சுண்டைக்காய் சமாசாரம்’ என்பார்கள். ஆனால், அப்படி அலட்சியப்படுத்தக்கூடியதல்ல,...

Sunday, October 13, 2019

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். சும்மாவா சொன்னார்கள் .........

அரசன் ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்தான்.

பயண வழியில் ஓர் இரவு வழியில் இருந்த ஒரு நெசவாளியின்

வீட்டில் தங்கினான்......!!

அவர்களுக்கு தன் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பது அரசன் என்பது தெரியாது.....!!

யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என

நினைத்துக்கொண்டு தங்க வசதி செய்து கொடுத்தார்கள்......!!

அரசன் காலையில் எழுந்து கொண்டபோது ,

நெசவாளி நூல் நூற்கத் தொடங்கியிருந்தான்.....!!

அவனது இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது.....!!!

அரசன் அந்த நெசவாளியிடம்

"இது என்ன உனது இடது கையில் கயிறு?’’ என்று கேட்டான்......!!

‘தொட்டிலில் உள்ள குழந்தையை ஆட்டுவதற்கானது.......!!!

குழந்தை அழுதால் இதை இழுப்பேன்…’’

என்றான் நெசவாளி நூல் நூற்றுக்கொண்டே.

அவன் அருகில் ஒரு நீண்ட குச்சியிருந்தது......

‘‘இந்தக் குச்சி எதற்கு?’’ எனக் கேட்டான் அரசன்.......!!!

‘‘வெளியே என் மனைவி தானியங்களை வெயிலில் காயப்போட்டிருக்கிறாள்......!!

இந்தக் குச்சியின் மறுமுனையில் கருப்பு கொடியைக் கட்டியிருக்கிறேன்......!!!

இதை அசைத்தால் பறவைகள் அருகில் வராது’’ என்றான்......!!

அந்த நெசவாளி தனது இடுப்பில் மணிகளைக் கட்டியிருந்தான்.....!!

‘‘இந்த மணியை எதற்கு கட்டியிருக்கிறாய்?’’ எனக் கேட்டான் அரசன்.....!!

‘‘வீட்டில் ஒரு எலி இருக்கிறது.

அதன் தொல்லையை சமாளிக்க,

இந்த மணியை ஒலித்தால்போதும், ஒடிவிடும்!’’

என்று பதில் சொன்னான்.....!!

அவனது வீட்டின் ஜன்னலுக்கு வெளியே நாலைந்து சிறார்களின் முகம் தெரிந்தது.....!!

நெசவாளியைப் பார்த்து ,

‘‘அவர்கள் என்ன செய்கிறார்கள்?’’ என்று கேட்டான் அரசன்.

‘‘நூற்பு வேலை செய்துகொண்டிருக்கும்போது வாய் சும்மாதானே இருக்கிறது.......!!

அதனால்,

அவர்களுக்கு எனக்குத் தெரிந்த பாடங்களை நடத்துகிறேன்..... !!

அவர்கள் வெளியே இருந்து கேட்டுக் கொள்வார்கள்!’’ என்றான்......!!!

‘‘அவர்கள் ஏன் வெளியே இருக்கிறார்கள்.....?

உள்ளே வரலாம்தானே எனக் கேட்டான் அரசன்.....!!

அதற்கு நெசவாளி சொன்னான்:

‘‘அவர்கள் காதுதான் நான் நடத்தும் பாடங்களைக் கேட்கப் போகிறது....!!

ஆகவே,

அவர்களை என் வீட்டுக்கு முன்னால் உள்ள

மண்ணை குழைத்துத் தரும்படி செய்திருக்கிறேன்.....!!!

என்னிடம் பாடம் கேட்கும்போது,

அவர்கள் காலால் சேற்றை குழைத்துக் கொண்டிருப்பார்கள்’’ என்றான்.......!!!

ஒரே நேரத்தில் இவ்வளவு விஷயங்களை ஒருவன் செய்யமுடியுமா...??

என அரசனுக்கு வியப்பு தாங்க முடியவில்லை.....!!!

நெசவாளி சொன்னான்:

‘‘இது மட்டுமில்லை.

என் மனைவி கிரேக்கத்துப் பெண்.

ஒவ்வொரு நாளும் பத்து கிரேக்கச் சொற்களை சிலேட்டில் எழுதி வைத்துப் போகிறாள்....,!!

வேலை செய்துகொண்டே அதையும் கற்று வருகிறேன்.’’...!!!

ஒருவன் விரும்பினால் ,

ஒரே நேரத்தில் ,

கற்றுக்கொள்ளவும் ,

கற்றுத் தரவும் ,

வேலை செய்யவும் ,

வீட்டை கவனிக்கவும்

முடியும் என்பதற்கு

இந்த நெசவாளி தான் சாட்சி....!!

நமது சோம்பேறித்தனத்துக்கு காரணம் கற்பித்துக் கொண்டிராமல்... !!

தொடர்ச்சியான உழைப்பினைத் தந்து தோல்விகளைத் துரத்துவோம்....!!

உழைப்பே உயர்வினை தரும்.....!!

அதுவே நிம்மதியான நிலையான சந்தோஷமான வாழ்வினை தரும்...


சனிதோஷ துன்பத்தை தீர்க்கும் குச்சனூர் சனீஸ்வரன்!

குச்சனூர் சனீஸ்வரன்


அஷ்டமியும் நவமியும்...

அஷ்டமியும் நவமியும்...