உடல் நலம் : பல்களை பாதுகாப்பது எப்படி .........

Saturday, September 28, 2019

பல்களை பாதுகாப்பது எப்படி .........

பற்பொடி (பல் மருத்துவம்


உடலில் பற்கல் வலிமை மிக்க உறுப்பாகும். எழும்புகளையும்,
நகங்களையும் விட மிகவும் கடினமானவை. இரட்டைப் பற்களாக
கடவாய்ப் பற்கள் மேலும் கீழுமாக  ( 8+ 8 = 16ம் ) முன்வாய்ப் பற்கள்
ஒற்றையாகப் பதினாறும், சுமார் 12 வது வரை  அவைகள் விழுந்து
திடமுள்ளதாக  முளைத்து வரும். பின் ஆயுட்காலம் முழுவதும்
அவைகளைக் காப்பாற்றுவது அவரவர் கடமையாகும்.

   சிரசிலிருந்து ஊறி வரும் அமிலத்தால் ஈறு நொந்து புண்ணாகியும்
தடிப்பாகியும், பலவீனபடுவதாலும் இரட்டைப் பற்களில் நடு நரம்பு
கிருமியால் கறுநிறங் கொண்டு, பற்புழுவின் கொடுமையால் பற்கள்
குழிவிழுந்து சொத்தையாகி எடுத்துவிட வேண்டிய நிலையை
அடைகிறது.

“ கைமாறு கூறாமல் கற்றறிந்தோர் மெய்வருந்தி
                        தம்மாலியலுதவி தாம்செய்வார் -- அம்மா!
                        முளைக்கும் எயிறு முதிர்சுவை நாவிற்கு
                        விளைக்கும் வலியனதாம் என்று.”

     தாம் வருந்தி பாடுபட்டு, மற்றவர்களுக்குக் கொடுக்கும் ஈகைக்
குணமுள்ள பெரியோருக்கு ஒப்பாக பற்களை உபமானமாகக் காட்டி
பெரியோர் செய்து வரும் சேவையை ஒப்பிட்டிருப்பதும் பொற்றத்
தக்கதாகும்.

 வாலிப வயதுக்கு முன்னதாகவே பற்கள் போய்விடும் நிலை ஆண்
பெண்களுக்கு வந்துவிட்டால், முகம் வசீகரம் அற்றுப் போவதுடன்
வாய்ப் பேச்சும் குழறும். ஆகரங்களைச் சுவைக்கும்முன் அழுத்துக்
கடித்துண்ணும் நாவுணவில் ஒன்று பாழாகிவிடும். மேல் நாட்டார்
தின்பண்டங்கள்  வகைகளில் சிறுவர்களுக்குச் சுவைக்கும் முன்
அழுத்திக் கடிக்கும் கரும்பு, முறுக்கு, தேன்குழல், போன்ற கடினமான
பொருள்கள் கிடைப்பதில்லை. ரொட்டி, பிஸ்கட், கேக், கீரீம் போன்ற
இலகுவாகச் சுவைத்து உண்ணும் உணவு வகைகளே மேல்நாட்டவர்
களுக்கு திட்டமாக அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

 உணவைப் பலமாகக்  கடித்து உண்ணும் பிராணிகளுக்குத் திடமான
 பற்கள் அமைந்து செயல்படுவதைக் காணலாம். எலி, நாய், அணில்,
குரங்கு, புலி, சிங்கம் போன்ற பிராணிகளுக்கு அதன் ஆயுள் காலம்
உள்ள வரையுலும் பற்கள் ஆட்டம் கூட இருக்காது. காரணம் பலமான
கொட்டை, மரம், எலும்பு முதலியவற்றை அழுத்திக் கடித்து தின்பதாலே
பற்கள் பலமானதாக இருக்கின்றன. நாய்களுடைய பற்கள், எல்லா
பிராணிகளுக்கும் இருப்பதைவிட  பலமானவை காரணம் அவை
எழும்பிலுள்ள மாமிசன் முழுவதையும் தின்ற பின்பும், வெகுதூரம்
அந்த எலும்பை த் தூக்கிச் சென்று கடிப்பதாலேஅமிலம் வெளியாகி
பற்கள் உறுதிப்படுகின்றன. ஆகவே அழுத்திக் கடித்து உண்ணும்
உணவு வகைகள் நம் பண்பாட்டில் கையாண்டு வருவது ஒப்பற்றது.

அதிகாலையில் முதற்பணியாகப் பல் துலக்குவது நல்ல பழக்க
மாகும். பற்களிலிருந்து வெளியாகும்  துர்நீர்கள் காலை நேரத்தில்
இலகுவாகக் கழியும் தன்மை பெறுகின்றன.நவீனமுறையில்
பற்பசையை கொண்டு  ( Tooth Brushes ) பல் துலக்கி வருகிறார்கள்
அவைகளை உபயோகிக்கு முன்னும், பின்னும் சுடுதண்ணீரில்
தேய்த்து கழுவது முக்கியமாகும். இப்படி சுத்தம் செய்யாமல் இருந்
தால்  ஈ, கொசு, பல்லி போன்றவைகளால் நோய் தொற்று ஏற்படலாம்
இரவு நேரத்தில் மூலிகை பல் பொடிகளை கைவிரலால் துலக்குவதே
பற்களிலுள்ள எனாமல்  ( enamel ) போகவிடாமல் காப்பாற்றுவதாகும்.

 பல் கெட்டால் உடல் கெட்டுவிடும். பற்களைச் சுத்தமாக வைத்திருக்க
வேண்டும். பற்களை மாத்திரம் துலக்கிக் கொண்டிருந்தால் பயனில்லை
ஈறுகளை காலையில்  2, 3, நிமிடங்கள் விரலால் அழுத்தித் தேய்து
மசாஜ்  ( Massage ) செய்ய வேண்டும். அப்படிச் செய்து வந்தால் 80 வயது
ஆனாலும் பற்கள் விழாது. மற்றும் பற்களைச் சாம்பல்,கரகரப்பான
பற்பொடியைக் கொண்டு தேய்க்க கூடாது. பல் தேய்ந்து ஒளி மங்கி
விடும்.

  மேனாட்டு மருத்துவத்தில் கண்களுகென்றும், காதுகள், மூக்கு,தொண்
டைகென்றும், பற்களுக்கென்றும் தனித் தனி மருத்துவம் செய்யப்பட்டு
நம் நாட்டிலும் அரசினர் தனி மருத்துவ பயிற்சி அளித்து வருகிறார்கள்
ஆங்கில நாட்டிலும் உலக சுகாதார கணக்கின் படி  16 வயதுக்கு உட்
பட்ட சிறுவர்களில்  36 சதவிகிதம் அதாவது 3 ல் ஒரு பங்கு செயற்கை
பற்கள் பொருத்தியுள்ளனர். இதனை  ( WHO  Magazine, December 73 )ல்
வெளியீட்டுவுள்ளது. மிக்க நாகரீக படைத்துள்ள மக்களுள் இந்த
நிலைமை பரிதாபமானது. ஆராய்ச்சிக்கு தென்படாமல் ஒரு பல்லில்
நோய் கண்டதும் மற்ற பற்களுக்கும் நோய் பரவிவிடும் என்ற பீதியில்
பற்கள் அனைத்தையும் பிடுங்கி பறிமுதல் செய்துவிட்டு செயற்கை
பற்கள் பொறுத்தி விடுவதை வழக்கமாகி விட்டது.

     பற்களுக்கென்று தனி நோய் கிடையாது! மனித உடலில் அவை
முக்கியமான புனித வேலையை செய்து வருகின்றன்.எவ்வித கடினமான
தின்பண்டங்களையும் பற்கள் மென்று  அமிழ் நீருடன்  கலக்கச் செய்து
நாவிற்கு மிகுந்த ருசியை உண்டாக்கக் காரணமாவதோடு, தின்பண்டங்
களை வாயிலிருந்து தவறி  விழுந்து விடாமல் தடைசெய்யும் தொழி
லையும் மேற்கொள்ளுவது யாவரும் அறிந்த விஷயம்.

சித்தர்கள் கையாண்ட கரிப்பான் தூள், ஆல விழுது, நாயுருவி,
கருவேலம் பட்டை, வேப்பம் பட்டை,கிராம்பு,கடுக்காய்  இவற்றின் பொடியை  உப்புடன் சேர்த்து பல் துலக்குவதால் அமிலம் வெளியாகி பற்கள் உறுதிப்படும். சிரசிலுள்ள கட்டுக் கிடையான பித்தநீர் வெளி
யாவதே குறிக்கோளாகக் கொண்டு பற்களை சுற்றியுள்ள எல்லா
பாகங்களையும், நாவையும், தொண்டை சளியையும் தினந்தோறும்
சுத்தம் செய்து வந்தால் உடல் சம்பந்தபட்ட எந்த நோயும் உண்டாகாது.

     மூலிகை பல் பொடியின் பயன்கள்

பல் கறை நீங்கும், பல் முத்துப்போல் ஒளி தரும்,வாயின் துர்
நாற்றம் ஒரே வேலையில் நீங்கும், தொண்டைச் சளி வெளியாகும்,
நாக்கு சுத்தமாகும், பல் ஈறில் இரத்தம் வராது, அமில நீரால் ஈறு
வளராது,  புழு உண்டாகாது, பல் சொத்தை கருப்பு நீங்கி வலி வராது
பல் ஆட்டம் உறுதியாகும்,இப்பல்பொடி சித்தர்கள் கையாண்ட அனுபவ முறையாகும். பக்க விளைவுகள் கிடையாது. குறிபிட்ட அனைத்தும் உண்மை  தேவைக்கு பயன்பெறலாம்...

பல் நோய் வர காரணங்கள்

 அவசரமாக பல் துலக்குவதாலும், பல் துல்க்காமலே  காபீ, டீ
போன்ற பானங்களை பருவதாலும், சிறு குழந்தை பருவங்களில்
சாக்லெட் போன்ற இனிப்பு பண்டங்களை இரவு நேரங்களில்
சாப்பிட்டு  வாயை சுத்தம் செய்யாமல் இருப்பதாலும், பலவித நோய்
கள் உண்டாவது நிச்சயம்.  ஈறுகளில் தடிப்பாவது புண் புரைகளாவது
உண்டாவதற்கு கட்டாயமாக மருத்துவம் செய்து கொள்வது நல்லது.
புகையிலை, சிகரெட், பட்டணம்பொடி போன்ற லாகிரி வஸ்துகளை
வாயில் அடைக்கி வைப்பது கொடிய பழக்கமாகும்.அப்படி அடக்கி
வைப்பதால் அமிலம் கட்டி நோய் கிருமிகள் அதிகரித்து  பயோரியா
அல்லது பல் பவுந்திரம்  மற்றும் கன்னப்புற்று, தொண்டைப் புற்று,
போன்ற கொடிய நோய்களுக்கு இடஉண்டாகும். உணவு உட்கொள்ளும்
முன்னும், பின்னும் வாயை நன்றாகச் சுத்தம் செய்வது ஒவ்வொரு
வரின் கடமையாகும். வேறு நோய் வந்துவிடும் என்று பயந்து பற்கள்
முழுவதயும் பிடுங்கிவிட்டு செயற்கைப் பற்கள் பூட்டிக்கொள்வது
ஜீரணசக்தி குறைந்து உடலில் பலவித நோய்களை உண்டாக்கும்.
மற்ற நோய்களும் தீராமல் தொல்லை கொடுக்கும். இதனை தவிர்க்
கவும், வருமுன் காக்கவும்,

No comments:

Post a Comment