உடல் நலம் : எலும்பு மூட்டுகளில் ஏற்படும் வலிகளும் அதற்கான மருத்துவமும்.

Saturday, June 22, 2019

எலும்பு மூட்டுகளில் ஏற்படும் வலிகளும் அதற்கான மருத்துவமும்.

             முன்பு வயது முதிந்தவர்களுக்கு மட்டும் எலும்பு மூட்டுகளிலும் வலி ஏற்படும்.  இப்போது இந்த நோய் அனைத்து வயதினரையும் குறிப்பாக பெண்களை அதிக அளவில் தாக்குகிறது. எலும்பு மூட்டுகளில் வலி ஏற்படுவதற்கான காரணம், மூட்டு பகுதியில் உள்ள இணைப்பு திசு (CARTILAGE)சில விபத்தினால் கிழிவதாலும் அல்லது நசுங்குவதாலும் அல்லது தேய்ந்து போவதாலும் இணைப்புப்பகுதியின் உள்ள எலும்புகளில் உராய்வு ஏற்பட்டு தேய்மானம் அடைகிறது, இதனால் அந்த இணைப்பு மூட்டுகளில் வலி, வீக்கம் (ARTHRITIES) ஏற்படுகிறது.





          சில நபர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததாலும் , சில நோய்களின் தாக்கத்தாலும், அந்த திசுக்களில் உள்ள திரவம் சுரப்புத்தன்மை  குறைந்து அது கிழிதல் அல்லது நசுங்கும் தன்மையை அடைகிறது. இதனால் இரண்டு எலும்புகளின் உராயும் நிலை ஏற்படுகிறது அல்லது எலும்பு அரிப்பு ஏற்பட்டு எலும்பு உடையும் தன்மை அடைகிறது, இது நாளடைவில் உடலில் உள்ள மற்ற எலும்புகளையும் பாதிக்க செய்கிறது. பத்து சதவீதம்  பேருக்கு பாரம்பரியத்தினால் வருகிறது.     
            
          நாம் இதற்கு வலி நிவாரண மாத்திரைகளை உபயோகித்தால் மேலும் உடலின் உறுப்புகள் பாதிப்பு அடைந்து நோயின் தீவிரம் அதிகரிக்கும். இதற்கு முதலில் உடலின் கழிவுகள் சேராமல் கழிவுகளை வெளியேற்ற வேண்டும். மலசிக்கல் இல்லாமல் உடலின் கழிவுகளை வெளியேற்ற வேண்டும். இதற்கு கடுக்காய் பொடி காலை வேலையில் இரண்டு ஸ்பூன் வீதம் தினமும் எடுக்க வேண்டும். ஒவ்வொரு மூட்டு இணைப்புகளில் நல்லெண்ணெய் தடவ வேண்டும் வாரம் ஒருமுறை என்னை குளியல் எடுத்துக்கொள்ள வேண்டும். 

                

           அதிகமான வலி உள்ளோர் நல்லெண்ணெய் , கடுகு எண்ணெய் , விளக்கெண்ணெய் , மஞ்சள் சேர்ந்து மிதமான சூடேற்றி கற்பூரம் சேர்ந்து கண்ணாடி புட்டியில் வைத்துக்கொண்டு வலி உள்ள இடத்தில் தடவ வேண்டும். பிறகு ஒரு மணி நேரம் கழித்து அரிசி கழைந்த நீரை சுட வைத்து ஒரு கைப்பிடி கல் உப்பு சேர்ந்து வலி உள்ள இடத்தில் அமுக்கி பிடித்து இந்த  தண்ணீரை ஊற்றலாம்.இதனால் நாளடைவில் வலி குறையும்.
       
             சூரிய ஓளி படுமாறு காலை அல்லது மாலை வேளையில் நடை பெயர்ச்சி செய்யலாம், இதனால் உடலில் வைட்டமின் டி சேர்ந்து எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.  உடலில் உள்ள அனைத்து இணைப்புகளையும் அசைத்து கொடுக்க வேண்டும்,(இதற்கு ஹீலர் பாஸ்கர் ஐயாவின் பயிற்சி மிக சிறந்தது). இவ்வாறு செய்வதால் இரத்தம் ஓட்டம் பாய்ந்து உடல் தானாகவே வலுவிழந்த பகுதிகளை எலும்புகளை சரிசெய்து கொள்கிறது.உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 
     
              புளியன் இலை, நொச்சி இலை, வாத நாராயணன் இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து  வலியுள்ள இடங்களில் எண்ணெய் தடவி ஓருமணி நேரம் கழித்து,  இந்த தண்ணீரை ஊற்றினால் மூட்டு இணைப்புகளில் கோர்த்துகொண்டு இருக்கும் நீரை வெளியேற்றி வலி குறையும். 
புளியன் இலை
நொச்சி இலை
வாத நாராயணன்
                                                          


               
முடக்கத்தான் கீரை, சுக்கு எடுத்து நல்லெண்ணெய் போட்டு காய்ச்சி அந்த எண்ணெய் வலி உள்ள இடத்தில் தடவலாம். சுக்கு பெருங்காயம் சேர்த்து அரைத்து வீக்கம் உள்ள இடத்தில் தடவி வந்தால் வீக்கம் குறையும். 

          கீரை உணவுகள் பழங்கள் நார்சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளலாம். முருங்கை கீரை சூப்,  ஆட்டுக்கல் சூப், போன்றவற்றை உணவுடன் சேர்த்து எடுத்து கொள்ள வேண்டும். வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் எள்ளு, அல்லது நல்லெண்ணெய் எடுத்து கொள்ள வேண்டும். எள்ளு உருண்டைகளை எடுத்து கொள்ளலாம். வெந்தயத்தில் அதிக அளவு கால்சியம் உள்ளதால் வெந்தய பொடியை காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் எடுத்துக்கொள்ளலாம். இவைகள் எழுப்புகளின் வளர்ச்சிக்கும் மேலும் எலும்புகள்  பாதிப்படைவதை தடுக்கிறது.

      கால் பாதங்களை மசாஜ் பண்ணி விடுங்கள். கையின் நடு விரலையும்,மோதிர விரலின் நுனிப்பகுதியையும் பேனா முனை கொண்டு  அழுத்தி விடவேண்டும், இப்படி செய்வதால் சிறுநீரகம் தூண்டப்பட்டு உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுகிறது, இதனால் மூட்டு இணைப்புகளில் உள்ள வலியும் குறைகிறது.

2 comments:

  1. மிகவும் பயனுள்ள குறிப்புகள்.

    ReplyDelete
  2. Thanks for ur valuable information

    ReplyDelete