உடல் நலம் : கோடை காலத்தில் ஏற்படும் சரும நோய்களும் அதனை தடுக்கும் முறைகளும்.

Wednesday, June 19, 2019

கோடை காலத்தில் ஏற்படும் சரும நோய்களும் அதனை தடுக்கும் முறைகளும்.

                 கோடை காலத்தில் சரும நோய்களும் , தொற்று நோய்களும் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில் உணவு  சீக்கிரம்  கெட்டு விடும் வாய்ப்பு உள்ளது. அதனால் அப்போது சமைத்த உணவை உட்கொள்ளுங்கள். கோடைகாலத்தில் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உடலுக்கு குளிர்ச்சியான உணவை எடுத்து கொள்ள வேண்டும். வாயு நிரப்பப்பட்ட  மென்பானங்கள் குடிக்க கூடாது.கரும்புச்சாறு, இளநீர், மோர், பழச்சாறு குடிக்கலாம்.

 அம்மை நோய்:       
                                கோடை காலத்தில் அம்மை நோய்க்கான வைரஸ் அதிகமாக பரவும் தன்மை கொண்டது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளிக்கலாம். பகல் நேரங்களை வெயிலில் அலைவதை குறைத்து கொள்ளலாம். அம்மை நோயால் பாதிக்க பட்டவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு தும்மல் இருமல் மற்றும் சில காரணங்களால் மற்றவர்களுக்கு பரவும் தன்மை கொண்டது. அம்மை நோய் பாதிக்கப்பட்டால் பயப்பட தேவையில்லை அவர்களுக்கு குளிர்ச்சியான உணவு , பழங்கள் , இளநீர் , வீட்டில் தயாரிக்கப்பட்ட பழச்சாறு இதனை கொடுக்கலாம். அவர்களுக்கு சிறந்த கவனிப்பு ஓயுவும் அவசியம். இதற்கு வேப்பிலை , மஞ்சள் அரைத்து பூசி குளிக்க வைத்தால் இந்த வைரஸ் மேலும் பரவாமலும் அந்த நோயின் தாக்கத்தையும் குறைக்கும். 



வியர்க்குரு:

                           கோடைகாலத்தில் வியர்க்குரு மற்றும் வேனல் கட்டிகள் ஏற்படும். உடலை சுத்தமாக பராமரிக்க வேண்டும் தோலில் உள்ள வியர்வை சுரப்பிகளில் அழுக்கு சேர்த்து அடைத்துக்கொள்ளும் அங்கு பாக்டீரியா தொற்றிக்கொள்ள வியர்க்குரு உண்டாகிறது. வெயில் காலத்தில் தினமும் இரண்டு அல்லது மூன்று முறை குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். சந்தனம், பால் அல்லது தயிரில் கலந்து வியர்க்குரு உள்ள இடத்தில் தடவலாம். சந்தனம், முல்தானிமெட்டி , தயிர், அல்லது ரோஸ் வாட்டர் அல்லது பாலில் குழைத்து தடவலாம்.  சோற்றுக்கற்றாழை சதை பகுதியை எடுத்து வியர்க்குரு உள்ள பகுதியில் தடவலாம். பனைநுங்கு சாறு எடுத்து தடவலாம். 


படை, தேமல்:

       உடலில் ஈரமுள்ள பகுதியில் பூஞ்சை தொற்று ஏற்பட்டு படை, தேமல் தோன்றும். இதற்கு உள்ளாடைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். இதற்கு துளசி இலை சாறு பிழிந்து அதனுடன் எலுமிச்சை பழம் சாறு சேர்த்து தேமல் உள்ள இடத்தில் தடவலாம். வெற்றிலை சாறு தேமல் உள்ள இடத்தில தடவலாம். பூண்டு நசுக்கி அந்த சாறினை தேமல் உள்ள  இடத்தில் தடவலாம். ஆப்பிள் சீடர் வினிகர் பஞ்சில் நனைத்து தேமல் உள்ள  இடத்தில்  தடவிட்டு வந்தால் தேமல் போய்விடும். கோடைகாலத்தில் இறுக்கமான உடைகளை தவிர்க்கவும். தளர்ந்த பருத்தி உடைகள் அணிவது சருமத்திற்கு குளிர்ச்சியும்பாதுகாப்பையும் தரும். 

1 comment: