உடல் நலம் : January 2020

Wednesday, January 22, 2020

நோயின்றி வாழ அற்புத வழிகள்:


இறைவன் படைத்த நம் உடல் உறுப்புகளின் அதிசயங்கள்!!

70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடலில் ஆக்ஸிஜன், கார்பன், ஹைட்ரஜன், கால்சியம் போன்ற 58 மூலப் பொருள்கள் (தனிமங்கள்) உள்ளன.

மனித உடலின் #மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்றத் தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை. மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.

மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று போய்விடுகிறது. கடைசிவரை வளர்வது #காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும்.

ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் #ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம். உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் #உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே.

பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறை #கண்ணை சிமிட்டுகிறோம். இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.

உடலின் வலுவான விஷயம், #பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள்.

விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை. தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும்போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 #தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.

நமது #பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும் காரணம் ஒரு சதுர அடியில் வெறும் 3ல் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன.

#இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.

#உடலின்மொழி.

1.   உடல் - உணவை கேட்கும் மொழி - பசி

2.   உடல் - தண்ணீரை கேட்கும் மொழி   - தாகம்

3.   உடல்   - ஓய்வை கேட்கும் மொழி   - சோர்வு, தலைவலி

4.   உடல் - நுரையீரலை தூய்மை செய்யும் மொழி - தும்மல், சளி, இருமல்.

5.   உடல் - உச்சி முதல் பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - காய்ச்சல்

6.   உடல் - காய்ச்சலின் போது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழி -   வாய் கசப்பு மற்றும் பசியின்மை

7.   உடல் - காய்ச்சலின் போது நான் உடலை தூய்மை செய்கிறேன், நீ எந்த வேலையும் செய்யாதே என்று சொல்லும் மொழி - உடல் அசதி

8.   உடல் - எனக்கு செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வாந்தி

9.   உடல் - நான் குடல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - பேதி

10. உடல் - இரத்தத்தில் உள்ள நச்சை நான் தோல் வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வியர்வை

11.. உடல் - நான் வெப்பநிலையை சீர் செய்து இரத்தத்தில் உள்ள நச்சை முறிக்கப்போகிறேன் என்று சொல்லும் மொழி - உறக்கம்

12. உடல் - நான் முறித்த நச்சை இதோ வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - சிறுநீர் கழித்தல்

13. உடல் - உணவில் உள்ள சத்தை பிரித்து இரத்தத்தில் கலந்து, சக்கையை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - மலம் கழித்தல்

எனவே நாம் அனைவரும் உடலின் மொழி அறிந்து, நமக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் அதை உடனே மருந்தோ, மாத்திரையோ கொண்டு தடை செய்ய வேண்டாம்.

உடல் தன் வேலையை சீராக செய்ய நாம் அனுமதித்தால் தான், நாம் நோய் எனும் பிணியில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.

நாம் அனைவரும் முதலில் நம் உடலை  நேசிப்போம், நம் உடல் உள் உறுப்புகளை #நேசிப்போம், நாம் நம்மை  நேசிப்போம்.

நாம் வெளி உறுப்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ, அதே அளவிற்கு நம் உள் உறுப்புகளின் உணர்வுகளும், #மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாம் ஆரோக்கியமாகவும், அழகான தோற்றத்துடனும் இருக்க முடியும்.


தொண்டைக்கு இதம் அளிக்கும் தூதுவளை

தூதுவளை

Saturday, January 18, 2020

பெண்களை தாக்கும் கர்ப்பப்பை இறக்கம்…❗

மனதின் வலிமை!!- ஒரு கதை ..



ஒரு பெண், லண்டன் நகரத்தில் வாழ்பவள். அங்குள்ள கால நிலைக்கு ரோஜா மலர்கள் நன்கு வளரும். அவை எல்லோருக்கும் பிடிக்கும்.

ஆனால், இந்த பெண்ணிற்கு ரோஜா மலர்கள் என்றாலே அலர்ஜி. ஒரு பூ அருகிலிருந்தாலே, அவள் கண்களிலிருந்து கண்ணீர் வரும், தும்மல் வரும்.

ரொம்பவும் கஷ்டப்படுவாள். அதனால் ரோஜா மலர்கள் அருகில் செல்லாமல் பார்த்துக் கொள்வாள்.

இந்த சூழ்நிலையில் ஒருநாள், அவளுடைய ஆபீசில் ஒரு மீட்டிங்,அதில் கலந்து கொள்ளப் போனாள்.

அந்த மீட்டிங் அறைக்குள் நுழைந்தவுடன் அவருக்கு ஒரே அதிர்ச்சி. ஒரு பெரிய டேபிளில் நூற்றுக்கணக்கான ரோஜா மலர்களை வைத்து அலங்கரித்திருந்தார்கள்.

'ஒரு பூ அருகில் இருந்தாலே நமக்கு அலர்ஜியாச்சே, இவ்வளவு பூக்கள் மத்தியில் நான் எப்படி மீட்டிங்கை அட்டென்ட் செய்யப் போகிறேன்' என்று பயந்தாள்.

ஆனால் வேறு வழியில்லாமல், அவளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சென்று அமர்ந்தாள். பூக்களைப் பார்த்ததுமே அவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் வந்தது, தும்மலும் வந்தது, முகமெல்லாம் சிவந்தும் விட்டது.

மீட்டிங் இன்னும் ஆரம்பிக்கப் படவில்லை, இந்த சூழ்நிலையில், பின்னாலிருந்து ஒருவர் எழுந்து வெளியில் செல்கிறபோது "இந்த பூக்களைப் பாருங்கள். நிஜமான பூக்கள் போலவே இருக்கின்றன.." என்று வியந்தபடி கூறிக்கொண்டே சென்றார்.

அப்பொழுது தான் இவளுக்கு தெரிந்தது, அந்த பூக்கள் உண்மையான பூக்கள் அல்ல. எல்லாமே காகிதத்தால் செய்யப்பட்ட செயற்கை மலர்கள் என்று.

இவர் யோசித்தார்.. "இந்த பூக்கள் எப்படி எனக்கு அலர்ஜியை ஏற்படுத்த முடியும்..?"

இப்படி நினைத்த மறுவினாடியே அவளுடைய அலர்ஜிக்குண்டான அறிகுறிகள் அனைத்துமே மறைந்து விட்டன.

#இதுதான்_நமது_மனம்..

#இந்த_மனதால்_நோய்களை_உருவாக்கவும் முடியும்.. #குணப்படுத்தவும் முடியும்..

இந்த மனதால்

பிரச்னையை உருவாக்கவும் முடியும்.. அதற்கு தீர்வையும் தர முடியும்.

எனவே,

நேர்மையான எண்ணங்களை மட்டும் எண்ணி, நாம் மனதை நல்ல முறையில் பயன்படுத்துவோம்.

பொறுமையைவிட மேலான தவமுமில்லை.

திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.

இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.

மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!

தோல்விகள் இருந்தாலும். இருளை வெளிச்சமாக்கும் கதிரவன் போல அவற்றை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள்.

முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை.

விவேகத்துடன் ஒவ்வொரு பிரச்சனைக்கும் முடிவு காண முயலுங்கள்.

இந்த விடியல் உங்கள் வாழ்விலும் இன்பமாக  விடியட்டும்…!


நெட்டி முறிப்பது சரியா?


சண்டை போடும் போது பெண்கள் இந்த தவறை மட்டும் செய்தீராதீங்க..!

விளக்கெண்ணெயைப் பயன்படுத்தி அழகூட்டலாமே!!

பொடுகு தொல்லைக்கு சமையலறையில் ஒளிந்திருக்கும் 11 தீர்வுகள்.:

முத்தான 10 பாட்டி வைத்தியம்


இன்றைய அவசர வாழ்க்கை முறையில், காய்ச்சல் வந்தாலோ சளி பிடித்தாலோ உடனே மருந்து மாத்திரைகளை வாங்கி விழுங்கும் பழக்கம் அதிகமாகிவிட்டது. 60 வயதைக் கடந்த நான், என் சிறிய வயதிலிருந்து கற்றுக்கொண்ட வீட்டு மருத்துவத்தைத்தான் கடைப்பிடித்து வருகிறேன். ஒருவேளை அப்படிச் செய்து சரியாகவில்லை என்றால் மட்டுமே மருத்துவரை அணுகுவேன். கஷாயம் வைப்பது மாத்திரை போடுவதுபோல் எளிதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், எந்த பின்விளைவுகளும் அதில் இருக்காது. டாக்டரிடம் செல்ல பணமாவது இருக்கும். நேரம்தான் இல்லாமல் போய்விட்டது. சில எளிய பிணிகளுக்கான எளிமையான வைத்தியங்களைப் பின்பற்றி பாருங்கள்... நான் பின்பற்றி நலமானதால் அவற்றை இங்கே பகிர்கிறேன்.

முதலில் நமக்கு அடிக்கடி வரும் சளி காய்ச்சலுக்குப் பாட்டி வைத்தியம் சிலவற்றைச் சொல்கிறேன். சளி இருமல் இதனோடு காய்ச்சல் என்றால் ஒன்றரை டம்ளர் தண்ணீர் எடுத்து அதில் 2 வெற்றிலை, 1/2 தேக்கரண்டி (டீ ஸ்பூன்) சீரகம் , 2 கிராம்பு ,1 ஏலக்காய், 7 மிளகு இவற்றைப்‌போட்டு நன்கு கொதிக்கவிடுங்கள் 3/4 டம்ளர் ஆனதும் பொறுக்கும் சூட்டில் குடியுங்கள். இரண்டுநாள் காலையும் மாலையும் செய்தால், சளி வெளியேறி இருமல்போய் காய்ச்சலும் விட்டுவிடும். அப்படியும் காய்ச்சல் சரியாகவில்லையென்றால் டாக்டரிடம் செல்லுங்கள். தேவைப்படாது என்பதே உண்மை. சிறுவர்களுக்கு இதில் பாதியளவு எல்லாம் போட்டு கொதிக்க வைத்துத் தரலாம். குணமாகும்.

கண்சிவப்பியிருந்தால் அதாவது, வலது கண் சிவந்தால் இடதுகால் கட்டைவிரல் நகத்தின்மேல் வெற்றிலை சுண்ணாம்பைத் தடவி வைத்தும் இடது கண் சிவந்தால் வலது கால் கட்டைவிரல் நகத்தில் சுண்ணாம்பு தடவியும் பூசி வரக் கண்சிவப்பு போகும்.

கண்ணில் நீர் வடிந்து கலங்கி வலித்தால் கொய்யாமர இலைகளை நான்கைந்து பறித்துவந்து தோசைக்கல் அல்லது வாணலியைச் சூடாக்கி அதன்மேல் இலைகளை மாற்றி மாற்றிப் போட்டு கண்மேல் ஒத்தடம் வைக்க, ஒருநாளில் மூன்றுமுறை செய்ய கண்டிப்பாக இந்தப் பிரச்னை சரியாகிவிடும்.

பல் தேய்க்கும்போதும் மாலையில் முகம் கழுவும்போதும் தண்ணீரை கண்களில் அடித்துக் கொள்ளுங்கள். இது கண்களுக்கான சிறந்த தெரபி.

வாயுத் தொல்லையால் முதுகுவலி வந்தால் ஒரு டம்ளர் பாலில் 8 மீடியம் சைஸ் பூண்டெடுத்து மாத்திரைபோல் துண்டுகளாக்கி அது வேகும் வரை நன்கு காய்ச்சி பூண்டை சுவைத்துச் சாப்பிட முதுகுவலி போய்விடும். ரத்தத்தில் சர்க்கரை அளவும் கொலஸ்ட்ரால் அளவும் குறையும். வாயுத் தொல்லையும் குணமாகும். இதயத்துக்கும் நல்லது.

சில பேருக்குக் காலில் தொடையில் அரிப்பு ஏற்படும். சிலபேருக்கு காலில் கறுப்பு நிறத்தில் படையாக ஆரம்பித்து உடம்பு முழுவதும் நமைச்சல் ஏற்படும். இதற்கு எளிதான மருந்து குப்பைமேனி இலையை ஒரு கைப்பிடி எடுத்து மிக்ஸியிலேயே அரைக்கலாம். தண்ணீர் ஊற்றி அரைத்து அதை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து ஆறிய பின் நமைச்சல் இருக்கும் இடத்தில் ஊற்றிக் கழுவிவர குணமாகும். தொடைப்புண் உடனடியாக சரியாகும்.

படிகாரத்தை 5 கிராம் எடுத்து (ஒரு சிறு துண்டு), ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு வைத்தால் கரையும். அதைக்கொண்டுகூட கழுவி வரலாம். இவையெல்லாம் செய்த பின் வேறு தண்ணீர் ஊற்றிக் கழுவாதீர்கள். மருந்து பிடிக்கட்டும்.

கறுப்பு படை நமைச்சலுக்குக் குப்பைமேனி இலையோடு வேப்பிலையும் சேர்த்தரைத்து மஞ்சள் போட்டு பாதிக்கப்பட்ட இடங்களைக் கழுவி வர குணமாகும். இதையெல்லாம் பொடியாக நாட்டு மருந்துக்கடையில் வாங்கிகூட செய்யலாம். இந்தத் தண்ணீரை நாம் ‌குளிக்கும்‌நீரில் கலந்து குளித்துவர உடல் அரிப்பு குணமாகும்.

குதிகால் வலிக்கு நான் சூடான செங்கல்போட்டு பழுத்த எருக்கு இலை போட்டு நிறைய நாள் அதன்மேல் மிதித்தேன். ஆனால், ஒரு சித்த வைத்தியர் சொன்ன யோகா தெரபியில் உடனே நலமானது. ஓரிருநாளில் வித்தியாசம் தெரிய ஆரம்பித்தது. நம் முதுகு, சுவரில் லேசாகப்படுமாறு நின்றுகொண்டு இரு கைகளையும் மேலே உயரத்தூக்கி ( நன்கு நீட்டித் தூக்குங்கள், வளைக்காமல்) பின் நுனிவிரல்களால் நிற்க வேண்டும். முதுகை லேசாக சுவரில் வைப்பது விழாமல் இருக்கவே.

நேராக நின்று செய்யுங்கள். இதன்மூலம் நம் இரத்த ஓட்டம் கால்களில் நன்றாகப் பாய்கிறது. குதிகால் வலிபோகிறது. இதுவும் என் அனுபவமே. இப்படி நிற்பது மூன்று அல்லது ஐந்து நிமிடங்கள் நில்லுங்கள். வயதானால் சர்க்கரை நோய் வந்தால் நம் கால்விரல்கள் மரத்துப் போகும். இந்தப் பயிற்சியை தினம்தோறும் இருமுறை செய்யுங்கள். நல்லது.

குழந்தைகளுக்கோ நமக்கோ காது வலி வந்தால் தேங்காய் எண்ணெய்யில் (1 ஸ்பூன்) 1/2 பூண்டைத் தட்டிப்போட்டு சூடாக்கி ஆறிய பின் காதில் ஊற்ற (மறக்காதீர்கள், ஆறியபின்) காது வலி குணமாகும். கொஞ்சம் காதைச்சுற்றிகூட தேய்க்கலாம். இதனால் காது வலி சரியாகும். இதில் சரியாகவில்லையென்றால் பின் ஏதாவது பிரச்னையென்றால் டாக்டரிடம் போகலாம். சாதாரண காதுவலிக்கு இந்த எளிய வைத்தியம் போதுமானது.

இது எல்லோருக்கும் தெரிந்ததுதான். எங்காவது ஏற்படும் வலிகளுக்குத் தேங்காய் எண்ணெய்யில் கட்டிகற்பூரம் பொடித்துப் போட்டு காய்ச்சி வலியிருக்கும் இடத்தில் தேய்த்தால் வலி சரியாகும். முக்கியமாகக் குழந்தைகளுக்கு நெஞ்சில் சளியிருந்தால் நாம் விக்ஸ் தடவிவிடுகிறோம். கொஞ்சம் சோம்பேறித்தனம் பார்க்காமல் இந்தக் கற்பூர தேங்காய் எண்ணெய்யைத் தடவிப்பாருங்கள், நல்ல பலன் கிட்டும். லேசான சூட்டில் தடவுங்கள்.

பச்சைக் குழந்தைகளுக்கு வயிற்றுவலியால் அழுதால் சொல்லத் தெரியாது. தொப்ப்ளைச் சுற்றி விளக்கெண்ணெய் தடவ வயிற்றுவலி உடனே நின்றுவிடும். பால் கொடுக்கும் தாய்மார்களின் உணவைப் பொறுத்தே குழந்தைகளுக்கு வயிற்றுவலி ஏற்படும். அது வாயு வயிற்றுவலி என்றால் வசம்பை விளக்கில் காண்பித்து சுட்டு அதன் கரியை நீரில் இழைத்து தொப்புளைச் சுற்றிப் போட வலிபோய் குழந்தை அழுகையை நிறுத்தும். இவையெல்லாம் நிறைய பேருக்குத் தெரியாது.

நமக்கு அஜீரணம் ஏற்பட்டால் லிம்காவையும் கோக்கையும் குடிப்பதற்குப் பதிலாக நீர்மோர் ஒரு டம்ளர் எடுத்து 2 சிட்டிகை பெருங்காயம் 1/4 ஸ்பூன் மிளகு பொடி கலக்கி சாப்பிட அஜீரணம் போகும். புட் பாய்சன் லேசாக ஏற்பட்டால்கூட ஒருநாள் மூன்று முறை இதைக் குடித்து வர சரியாகும். மிகக் கடுமையானால் மட்டும் டாக்டரிடம் சென்றால் போதும்.

நாம் காலையில் வெறும் வயிற்றில் சீரகம் காய்ச்சிய நீரும் (1 டம்ளருக்கு 1/4 டீ ஸ்பூன்) மதிய உணவிவுக்குப் பின் தயிர் கலந்த வெங்காய பச்சடியும் இரவு மேலே சொன்ன பூண்டுபாலையும் சாப்பிட்டு வர இதயநோய் இல்லாமல் நலமோடு வாழலாம். இதயத்தில் பிளாக் ஏற்படாது. ஓரிரு பிளாக் கரைந்துபோகும்.

எப்போதும் புத்தகம் படித்து கணினி பார்த்து டிவி பார்த்துக் கொண்டிருப்பதால் ஏற்படும் கண் அயர்ச்சிக்குக் கண்ணிமைகளின் மேல் விளக்கெண்ணெய் தேய்த்து வர கண்களின் அயர்ச்சி போகும்.

ஒரு நாளைக்கு இருமுறை 1 நிமிடம் கண்சிமிட்டலாம். கண்களின் இரு ஓரங்களையும் கண்ணிதழ்களையும் லேசாகத் தடவித்தரலாம். புருவங்களைத் தடவலாம். இவையெல்லாம் கண் பயிற்சிகள்.

நம்மைப் படைத்த இறைவன் நமக்கு வேண்டியதை இயற்கையிலேயே தந்துமிருக்கிறான். மேற்சொன்ன அத்தனையும் ஆபத்தில்லாதது. இந்த எளிமையான வழிமுறைகளை நாம் சோம்பேறித்தனமில்லாது மேற் கொண்டால் டாக்டரிடம் செல்லும் நேரமும் பணமும் மிச்சமாகும்.