உடல் நலம் : கர்ப்பப்பை நீர்கட்டியை கரைக்கும் மருந்து

Saturday, August 17, 2019

கர்ப்பப்பை நீர்கட்டியை கரைக்கும் மருந்து



பெண்களுக்கு  ஏற்படும்  கர்ப்பப்பை  நீர்கட்டி, ஆண்களுக்கு  உண்டாகும்  விதைப்பை  நீர்கட்டி  இவைகளை  கரைக்ககூடிய அற்புதமான கசாயம்.  அதாவது  மருந்து  ஒன்று  நிவாரணம்  மூன்று.  அப்படி  என்ன கசாயம்???

நாட்டுமருந்துகடையில்  கழற்ச்சிகாய்கொட்டை  அல்லது பவுடர் வாங்கி கொட்டையின்னா  நாலு கொட்டை  எடுத்து உடைத்து பருப்பு எடுத்து பவுடர்ஆக்குங்கள். பொடியாகயிருந்தால் ஒருத் தேக்கரண்டி எடுத்துகொள்ளுங்கள். ஐந்து  பூண்டு பல் , மூன்று சிட்டிகை பெருங்காயம் அதாவது மூக்குபொடி போட எடுப்போமே அந்த அளவு,  ஒரு கரண்டி கொள்ளு எடுத்து கொள்ளை பொடி செய்து கொள்ளுங்கள். பூண்டு பல்லை  நன்றாக நசுக்கி நான்கு பொருள்களையும்  ஒன்றரை டம்ளர் தண்ணீரில் கலந்து  கொதிக்கவைக்க வேண்டும்.

அது  ஒருடம்ளர் அளவு சுருங்கியதும்  இறக்கி ஆறவையுங்கள்.  இதை இரவில்  செய்யுங்கள். காலையில் வடிகட்டி  காலையில் எப்போது வேண்டுமானாலும்  பாதி குடியுங்கள். மீதியை  இரவுசாப்பாட்டுக்கு பிறகு குடியுங்கள்.  இப்படி 21நாள் தொடர்ந்து குடித்துவந்தால் கொழுப்புகட்டி,   கர்ப்பபை நீர்கட்டி, ஆண்களுக்கு விதை நீர்கட்டி குணமாகும்.

பத்தியம் கிடையாது.  கவலைபடவேண்டாம்.  கசப்பாகயிருக்கும் நாக்கு கசப்புதன்மை போக கொஞ்சம் கருப்படி  சுவைத்துகொள்ளலாம். ஆரோக்கியம்  ஒன்றே குறிக்கோள். நோயற்ற வாழ்வே  குறைவற்ற செல்வத்துடன் வாழ்வோம்.

படித்ததில் பிடித்தது.

No comments:

Post a Comment