உடல் நலம் : உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்கு செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

Thursday, December 5, 2019

உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்கு செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

நல்ல அழகான பதில். படித்ததில் பிடித்தது. உங்களுக்காக பதிவிடுகிறேன் ...



நடிகர் நாகேஷ் இடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்:-

நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டிடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வெச்சு சாரம் கட்டி, குறுக்கு பலகைகள் போட்டு, அதன் மேல் பல சித்தாள்கள் நின்று, கைக்குக் கை  கல் மாறி கட்டிடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்கு பிறகு அது முடிந்த பிறகு,  அந்த கட்டிடத்திற்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடுச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்து கொண்டே வருவார்கள்.
கட்டிடம் முடிந்து கிரஹப்  பிரவேசத்தன்று எந்த கட்டிடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்த சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வெறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரஹப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள். அத்தனை பெருமையும் அந்த வாழை மரத்துக்கு போய் விடும்.
இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா?  அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடு மாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்து  எடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய் சேரும்.
மறைந்து கிடக்கிறதே அந்த சவுக்கு மரம் அது கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டிடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும்  சிரித்துக்கொண்டே இருக்கும் .

No comments:

Post a Comment